தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Karthigai Deepam: மீண்டும் வீட்டுக்குள் என்ட்ரி கொடுக்கும் தீபா -அபி அதிர்ச்சி

Karthigai Deepam: மீண்டும் வீட்டுக்குள் என்ட்ரி கொடுக்கும் தீபா -அபி அதிர்ச்சி

Aarthi V HT Tamil
Apr 11, 2023 12:02 PM IST

கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட் பார்க்கலாம்.

கார்த்திகை தீபம்
கார்த்திகை தீபம்

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கார்த்தியிடம் இருந்து தப்பி வீட்டுக்கு வந்த நட்சத்திராவின் டூப்ளிகேட் அம்மா, அப்பா நட்சத்திராவுக்கு போன் போட்டு நடந்த விஷயங்களை சொல்ல நட்சத்திரா அதிர்ச்சி அடைந்து நான் உங்களை காப்பாற்றவில்லை என சொல்ல ஐஸ்வர்யா நான் தான் அவங்களை காப்பாற்றினேன் என சொல்லி நடந்த விஷயங்களை சொல்கிறாள்‌.

உடனே நட்சத்திரா நன்றி அக்கா என சொல்ல ஐஸ்வர்யா யாருக்கு யார் அக்கா? நீ எவ்ளோ பெரிய பிராடுனு எனக்கு தெரியும், உண்மையை சொல்லு என கேட்க நட்சத்திரா சிவா கார்த்திக்கு கருப்பான பெண்ணை திருமணம் செய்து வைக்க உள்ள திட்டத்தை சொல்கிறாள்.

அதன் பிறகு நான் இந்த வீட்டுக்குள்ள வந்ததும் உங்க எல்லோரையும் பார்த்து திருந்திட்டேன் என பொய்யாக ஒரு கதையை சொல்கிறாள். கார்த்தியை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு, நான் இப்போ திருந்திட்டேன். அத்தை கிட்ட சொல்லாதீங்க என சொல்லி கெஞ்ச ஐஸ்வர்யா நான் உண்மையை சொல்ல போறேன் என சொல்லி அபிராமி அருகே செல்கிறாள்.

ஐஸ்வர்யா உண்மையை சொல்லி விடுவாளோ என எதிர்பார்க்க நட்சத்திரா வெளிநாடு ஹனிமூன் செல்ல ஆசைப்படுவதாக மாற்றி சொல்ல அபிராமி அதுக்கான ஏற்பாடுகளை நானே செய்து தரேன் என சொல்கிறாள்.

பிறகு ஐஸ்வர்யா நட்சத்திராவிடம் எனக்கு தீபா இந்த வீட்டுக்கு மருமகளாக வர கூடாது, நீ நான் சொல்வதையெல்லாம் செய்ய வேண்டும் என சொல்ல நட்சத்திரா வேறு வழியில்லாமல் சம்மதிக்கிறாள். ‌‌அடுத்து நட்சத்திராவின் டூப்ளிகேட் அம்மா அப்பா வீட்டுக்கு வந்து நாங்க வெளியூர் போறோம் என சொல்லி நட்சத்திரா இந்த வீட்டில் தங்கட்டும் என சொல்ல மீனாட்சி மறுப்பு சொல்ல அபிராமி தங்க அனுமதி கொடுக்கிறாள்.

பிறகு நட்சத்திரா வீட்டுக்குள் வந்ததும் அருணாசலத்துக்கு அவரது அம்மா போன் போட்டு சென்னை வந்திருக்கேன், அடுத்து அங்கு தான் வர போறதா சொல்ல நட்சத்திரா அவரை பற்றி விசாரித்து அவரை கைக்குள்ள போட்டுக்கணும் என திட்டம் போடுகிறாள்.

மறுபக்கம் செல்ஃபி பாட்டி கோவிலில் இருக்க அங்கு ரவுடிகள் சிலர் ஓரு பெண்ணின் தாலி செயினை பறித்து ஓட பாட்டி அவர்களிடம் சண்டை போட ரவுடி ஒருவன் பாட்டியை அடிக்க வருகிறான். அப்போது அங்கு வரும் தீபா தடுத்து நிறுத்த போக அவளது தலையில் அடி விழ மயங்கி விழுகிறாள். பிறகு பாட்டி அவளை ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் செல்கிறார்.

அப்போது அபிராமி தனது மாமியார் செல்பி பாட்டிக்கு போன் போட்டு எங்க இருக்கீங்க என கேட்க கோவிலில் நடந்த விஷயங்களை சொல்ல உங்களை காப்பாற்றிய பெண்ணை நான் பாக்கணும் என சொல்கிறாள். பிறகு பாட்டி தீபாவை வீட்டுக்கு அழைக்க முதலில் மறுக்கும் அவள் பிறகு சம்மதம் தெரிவிக்கிறாள்.

பாட்டி தீபாவை கார்த்தி வீட்டுக்கு அழைத்து வர அபிராமி தீபாவை பார்த்து அதிர்ச்சி அடைகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்