Kanaa Serial: திருமண நாளில் சந்திக்கும் கஸ்தூரி, சந்திரசேகர்
Kanaa Serial update: கனா சீரியலின் இன்றைய அப்டேட்டை பார்க்கலாம்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கனா.
ட்ரெண்டிங் செய்திகள்
இந்த சீரியலில் அனன்யாவும் சிவகாமியும் பூஜையை நல்லபடியாக செய்து முடித்த அன்பரசியை பழிவாங்க கீழே உட்கார வைத்து சாப்பிட வைக்க விஷ்வாவும் அன்பரசியுடன் கீழே உட்கார்ந்து சாப்பிடுகிறான்.
அடுத்து அனன்யா அன்பரசியின் சைக்கிளை காரை வைத்து டேமேஜ் செய்ய தன்னுடைய அம்மா போல் நினைத்து சைக்கிள் டேமேஜ் ஆனதால் கண்ணீர் விட்டு அழ விஷ்வா அந்த சைக்கிளை சரி செய்து கொடுத்தான். இதையடுத்து வரும் நாட்களில் இந்த சீரியலில் நடக்க போவது என்ன என்பது குறித்து தெரிய வந்துள்ளது.
அதாவது, சந்திர சேகர் கஸ்தூரியுடன் திருமணமான நாளில் திருமணமான கோவிலுக்கு அன்பரசியை அழைத்து செல்ல சிவகாமி இந்த விஷயத்தை ராஜவேலுவிடம் சொல்ல அவர் கஸ்தூரியை அங்கு பார்த்தால் கொல்வதற்காக இவர்களை பின்தொடர்ந்து செல்ல இதை அறியும் சந்திரசேகர் காரை மாற்றி வேறொரு காரில் கிளம்பி செல்கிறார்கள்.
கஸ்தூரியும் இதே கோவிலுக்கு வருகிறாள். இந்த நிலையில் அன்பரசி சந்திரசேகரின் முதல் மனைவியும் மகளும் கிடைக்க வேண்டும் என அங்கப்பிரதட்சணம் செய்கிறாள். சந்திரசேகர் கஸ்தூரி பெயருக்கு அர்ச்சனை என சொல்ல கஸ்தூரி அவரை பார்த்ததும் மறைந்து கொள்கிறாள்.
கஸ்தூரி சந்திரசேகர் கண்ணில் படாமல் தொடர்ந்து மறைந்து கொள்கிறாள். அன்பரசியும் கஸ்தூரியும் கோவிலில் சந்திப்பார்களா? இல்லையா? அடுத்து நடக்கப் போவது என்ன என்ற கோணத்தில் சீரியல் கதைக்களம் நகர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
எனவே கனா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
டாபிக்ஸ்