தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Kana: அன்பரசி வீட்டை விட்டு துரத்திய பாட்டி…உண்மையை நிரூபிக்க விஷ்வா எடுக்கும்

Kana: அன்பரசி வீட்டை விட்டு துரத்திய பாட்டி…உண்மையை நிரூபிக்க விஷ்வா எடுக்கும்

Aarthi V HT Tamil
Mar 02, 2023 01:02 PM IST

கனா சீரியலின் இன்றைய அப்டேட்டை பார்க்கலாம்.

கனா
கனா

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த சீரியலில் சந்திரசேகர் மற்றும் அன்பரசி என இருவரும் கோவிலுக்கு சென்று இருந்த நிலையில் அங்கே கஸ்தூரி சந்திரசேகரை பார்த்து மறைந்து கொண்டாள்‌‌. இதனால் அன்பரசி மற்றும் சந்திரசேகர் என இருவரும் கஸ்தூரியை பார்க்காமல் வீட்டுக்கு வந்து விடுகின்றனர்.

இப்படியான நிலையில் வரும் நாட்களில் நடக்கப்போவது என்ன என்பது குறித்து தெரிய வந்துள்ளது. அதாவது வீட்டுக்கு வந்த சந்திரசேகர் தன்னுடைய இரண்டாவது மனைவி சிவகாமியிடம் நாங்க அப்படிக் கிளம்புனதும் உங்க அப்பாவுக்கு போன் போட்டு முதல் மனைவியை பார்க்க போற விஷயத்தை சொல்லிட்டியா என திட்ட சிவகாமி நான் சொல்லவே இல்லை என நாடகம் போடுகிறாள்.

அதன் பிறகு சிவகாமி மற்றும் அனன்யா என இருவரும் சேர்ந்து எப்படியாவது அன்பரசியை வீட்டை விட்டு வெளியே துரத்த வேண்டும் அவள் தான் எல்லாத்துக்கும் காரணம் என முடிவெடுத்து ஜானகி பாட்டிக்கு கொடுக்கும் காபியில் விஷ பவுடர் ஒன்றை கலந்து அன்பரசி கொடுக்க சொன்னதாக கொடுக்க சொல்லி வேலைக்காரியிடம் சொல்கின்றனர். இதற்காக ஒரு லட்சம் ரூபாய் பேரம் பேச வேலைக்காரியும் இந்த விஷயத்தை செய்ய ஒப்புக் கொள்கிறாள்.

பிறகு காபியில் பவுடரை கலந்து அன்பரசியை கூப்பிட முயற்சி செய்ய அந்த நேரத்தில் அன்பரசியே கீழே வர ஜானகி அம்மாவுக்கு இந்த காப்பியை கொடுத்திடு, நான் கடைக்கு போயிட்டு வரேன் என சொல்லி வேலைக்காரி வெளியே கிளம்பி செல்ல அன்பரசி காபியை கொண்டு போய் கொடுக்க ஜானகி குடிக்க போகும் போது அங்கு வரும் சிவகாமி அதில் இவ ஏதோ கலந்து இருக்கா என சொல்லி பிரச்சனை செய்ய அன்பரசி அப்படி எதுவும் செய்திருக்க மாட்டா என சந்திரசேகர் அந்த காபியை வாங்கி குடிக்க கொஞ்ச நேரத்தில் அவர் மூக்கில் ரத்தம் வந்து கீழே விழுகிறார்.

பிறகு டாக்டர் பரிசோதனை செய்து காபியில் ஏதோ பவுடர் கலந்திருப்பதாக சொல்ல ஜானகி பாட்டி இனி நீ இந்த வீட்டில் இருக்கக் கூடாது என அன்பரசியை வெளியே துரத்துகிறாள்.

அன்பரசி நான் இதை செய்யவில்லை என எவ்வளவு சொல்லியும் ஜானகி பாட்டி அதை காது கொடுத்து கேட்கவில்லை. பிறகு மஞ்சு வந்து அன்பரசி ஹாஸ்டல் அழைத்துச் செல்லும்போது அவள் கோவிலில் கடவுளிடம் வேண்டிக் கொண்டிருக்கும் போது அதே கோவிலுக்கு ஜானகி பாட்டி வர அப்போதும் அன்பரசி நான் எந்த தப்பும் செய்யவில்லை என சொல்ல ஜானகி அதை ஏற்க மறுக்கிறாள். கையில் சூடத்தை ஏற்றி அன்பரசி தன்னை நிரூபிக்க முயற்சி செய்தும் ஜானகி பாட்டி நம்ம மறுக்கிறாள்.

பிறகு இந்த விஷயங்கள் அனைத்தும் விஷ்வாவுக்கு தெரிய வர விஷ்வா அன்பரசி மீது எந்த தவறும் இல்லை என்பதை நிரூபிக்க முடிவு எடுக்கிறான். இதற்காக அனன்யாவை வைத்து ஒரு திட்டம் தீட்டுகிறான்.

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப் போவது என்ன? அன்பரசி குற்றம் அற்றவள் என்பது ஜானகி பாட்டிக்கு தெரிய வருமா? என்ற கோணத்தில் சீரியல் கதைக்களம் நகர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

எனவே கனா சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்