'நயன்தாரா புருஷனுக்கு புத்திமதி சொல்லுங்க.. கருமம்.. சிக்கி சீரழியுறாங்க' வச்சு செய்த சேகுவேரா
இயக்குநர் விக்னேஷ் சிவன், புதுச்சேரி அரசின் ஹோட்டலை விலைக்கு கேட்ட சம்பவத்தில், அவருக்கு யாராவது புத்திமதி சொல்லுங்கள் என பத்திரிகையாளர் சேகுவாரா பேசியுள்ளார்.

'நயன்தாரா புருஷனுக்கு புத்திமதி சொல்லுங்க.. கருமம்.. சிக்கி சீரழியுறாங்க' வச்சு செய்த சேகுவேரா
தமிழ் திரையுலகில் அதிக சர்ச்சைகளில் சிக்கும் ஜோடியாக நயன்தாரவும் விக்னேஷ் சிவனும் இருந்து வரும் நிலையில், இயக்குநர் விக்னேஷ் சிவன் புதிய விமர்சனங்களை சந்தித்து வருகிறார்.
ஹோட்டலை விலை பேசி சிக்கிய விக்கி
காரணம், புதுச்சேரி மாநிலத்துக்கு இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது சொகுசு காரில் வந்துள்ளார். அங்கு சட்டப்பேரவை வளாகத்துக்குள் சென்று, புதுச்சேரி சுற்றுலாத்துறை அமைச்சரான லட்சுமி நாரயணனை சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பின்போது, புதுச்சேரி கடற்கரை சாலையில் அரசுக்கு சொந்தமான சீகல்ஸ் ஹோட்டலை விலை பேசியுள்ளாராம். இந்த செய்தி வெளியானது தான் இயக்குநர் விக்ன்ஷ சிவன் மீதான இத்தனை ட்ரோலுக்கும் காரணம்.