‘சூர்யா இப்போ செஞ்சதும் தப்புதான்.. அங்க குடும்பத்துக்கே வன்மம் ரொம்ப அதிகம்..’ சேகுவேரா பளீச்
சினிமாவில் ரஜினி தொடங்கி சிவகார்த்திகேயன் வரை அனைவரும் வன்மத்தை வைத்துக்கொண்டு பேசுபவர்கள். அதிலும் சூர்யாவின் குடும்பத்திற்கு வன்மம் மிக அதிகம் என பத்திரிகையாளர் சேகுவேரா பேசியுள்ளார்.

‘சூர்யா இப்போ செஞ்சதும் தப்புதான்.. அங்க குடும்பத்துக்கே வன்மம் ரொம்ப அதிகம்..’ சேகுவேரா பளீச்
நடிகர் சூர்யா, பாலாவின் வணங்கான் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி பின், பாதியிலேயே வெளியேறி விட்டார். இதற்கு பல காரணங்கள் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், பாலாவிற்கும் சூர்யாவிற்கும் இடையிலான உறவு முறிந்ததாக பலரும் பேசி வந்த நிலையில், பாலாவின் 25ம் ஆண்டு விழா கொண்டாட்டத்தில் சூர்யா கலந்துகொண்டு பாலாவை புகழ்ந்து பேசினார்.
சூர்யாவிற்கு தன்னடக்கம்
இதுகுறித்து பத்திரிகையாளர் சேகுவேரா கிங்ஸ்வுட் டிவி எனும் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் சூர்யா குறித்து பல கருத்துகளை முன் வைத்துள்ளார்.
அந்தப் பேட்டியில் "சூர்யாவிற்கு பாலா வாழ்க்கை குடுத்தாருன்னு எல்லாம் சொல்ல முடியாது. அவரு வாய்ப்பு கொடுத்துருப்பாரு. அதை சரியா பண்ணி வளந்துருப்பாங்க. சூர்யா பாலாவ பாராட்டி பேசுனாறுனா அது அவரோடு தன்னடக்கம்.