10 நிமிடங்கள் நேரில் பேசிய ஜெயம் ரவி- ஆர்த்தி.. உடம்பு சரியில்லை என்ற ஆர்த்தி.. விவாகரத்து வழக்கை ஒத்திவைத்த நீதிமன்றம்
10 நிமிடங்கள் நேரில் பேசிய ஜெயம் ரவி- ஆர்த்தி.. உடம்பு சரியில்லை என்ற ஆர்த்தி.. விவாகரத்து வழக்கை ஒத்திவைத்த நீதிமன்றம் குறித்து அறிவோம்.

10 நிமிடங்கள் நேரில் பேசிய ஜெயம் ரவி- ஆர்த்தி.. உடம்பு சரியில்லை என்ற ஆர்த்தி.. விவாகரத்து வழக்கை ஒத்திவைத்த நீதிமன்றம்
மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து வழங்க வேண்டும் எனவும்; 2009ஆம் ஆண்டு பதிவு செய்த எங்களின் திருமணப் பதிவை ரத்து செய்ய வேண்டும் எனவும் நடிகர் ஜெயம் ரவி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு சென்னை மூன்றாவது குடும்ப நல நீதிமன்ற நீதிபதி தேன்மொழி முன் இன்று விசாரணைக்கு வந்தது. பின், நவ.27ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
விவாகரத்தை முதன்முதலில் பொதுவெளியில் சொன்ன ஜெயம் ரவி:
முன்னதாக ஜெயம் ரவிக்கும் அவரது மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும், இதனால் இருவரும் சில நாட்கள் தனித்தனியே வசித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல்கள் கசிந்த நிலையில், ஜெயம் ரவி மனைவி ஆர்த்தியை விட்டுப் பிரிவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அனைவரின் நலன் கருதியே இந்த முடிவை எடுத்ததாகவும் கூறியிருந்தார்.