Indira: நிச்சயத்தை நிறுத்திய இன்ஸ்பெக்டர்.. இந்திராவை வெளியே துரத்தும் கௌதம்
இந்திரா சீரியலின் இன்றைய அப்டேட்டை பார்க்கலாம்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மதியம் 1 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் இந்திரா.
ட்ரெண்டிங் செய்திகள்
இந்த சீரியலில் தனது அக்காவுக்காக இந்திரா கௌதமை திருமணம் செய்ய முடிவெடுத்தாள்.
இப்படியான நிலையில் வரும் நாட்களில் இந்த சீரியலில் நடக்க போவது என்ன என்பது குறித்து தெரிய வந்துள்ளது.
அதாவது, கௌதம் மற்றும் வருவின் நிச்சயதார்த்தத்திற்காக கௌதம் மற்றும் வரு குடும்பத்தினர் அனைவரும் மண்டபத்திற்கு வருகின்றனர். அப்போது மண்டபத்தில் கரண்ட் கட் ஆனதும் ஜெயா கோவம் அடைகிறாள்.
அப்பொழுது இந்திரா மண்டபத்திற்கு வர இந்திராவை பார்த்த கவுதம் தன்னை அறியாமல் மெய்மறந்து இந்திராவை நோக்கி செல்ல ஜெயா, ராகினி மற்றும் வரு கோவம் அடைகின்றனர். ஜெயா ராகினியிடம் ஏதாவது செய்து இந்திராவை மண்டபத்தில் இருந்து வெளியே அனுப்புமாறு சொல்கிறாள்.
இதனால் ராகினி மற்றும் ஹேமா வருவிற்கு வைக்கப்போகும் மெஹெந்தியில் ஆசிட்டை கலக்கின்றனர் அதை இந்திராவை வைத்து வருவிற்கு போடச் சொல்கின்றனர். வரு மெஹெந்தி போடும் இந்திராவை அசிங்கப்படுத்துகிறாள். ராகினியின் திட்டத்தை அறிந்துகொண்ட இந்திரா ஆசிட் கலந்த மெஹெந்தியை ராகினி மற்றும் ஹேமாவிற்கே போட்டு விடுகிறாள்.
நிச்சயதார்தத்தில் இருந்து இந்திராவை வெளியே அனுப்ப வரு நிச்சியதார்த்த புடவையை இந்திரா கிழித்ததாக பழி போடுகிறாள். நிச்சய தட்டை மாற்றும் நேரத்தில் போலீஸ் வந்து நிச்சயத்தை நிறுத்துகின்றனர்.
வரதட்சணை கேட்டதற்காக ஜெயாவை அர்ரெஸ்ட் செய்ய வந்திருப்பதாக கூற அனைவரும் இந்திராவை முறைக்கின்றனர். ராகினி யார் புகார் அளித்தது என்று கேட்க இன்ஸ்பெக்டர் புகாரளித்தது இந்திரா என்று சொல்கிறார்.
இதனால் போலீஸ் சென்றதும் கௌதம், இந்திராவை மண்டபத்தை விட்டு வெளியே போக சொல்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன என்ற கோணத்தில் இந்திரா சீரியல் கதை களம் நகர இருப்பதாக தெரியவந்துள்ளது.
எனவே இந்திரா சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
டாபிக்ஸ்