Aparna Balamurali: ‘மேலே கை வைக்கலாமா?’ மாணவர் விவகாரத்தில் வாய் திறந்த அபர்ணா!
சட்டக்கல்லூரி மாணவர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டது பற்றி முதன்முறையாக வாய் திறந்து பேசி இருக்கிறார் அபர்ணா பாலமுரளி.
பொதுவாக சினிமா நட்சத்திரங்களிடம் ரசிகர்கள் அத்துமீறி அவர்களின் தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிடுவது என்பது இயல்பான ஒரு விஷயமாக மாறிவிட்டது; படப்பிடிப்பு நடக்கும் இடங்களிலும், பிரபலங்கள் கலந்து கொள்ளும் விழாக்களிலும், பொது நிகழ்ச்சிகளிலும் ரசிகர்களால் அவர்கள் சந்திக்கும் மோசமான அனுபவங்களை அவர்களே பல்வேறு பேட்டிகளில் பேசி உள்ளனர். ஆனால் ரசிகர்கள் கேட்ட பாடில்லை; அதற்கு சான்றாக அமைந்ததுதான் அண்மையில் பிரபல நடிகை அபர்ணா பாலமுரளிக்கு நடந்தது; அவர் நடிப்பில் வருகிற ஜனவரி 26 ஆம் வெளியாக இருக்கும் ‘தங்கம்’ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிக்காக கேரள மாநிலத்தில் உள்ள எர்ணாகுளத்தில் உள்ள சட்டக் கல்லூரிக்கு அவர் வந்திருந்தார்; அவருடன் நடிகர் வினீத் சீனிவாசன், இசையமைப்பாளர் பிஜிபால் மற்றும் சில பிரபலங்களும் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவரும் மேடையில் அமர்ந்திருக்க மாணவர்கள் கரகோஷம் எழுப்பி ஆர்ப்பரித்தனர்; அப்போது திடீரென்று பூ ஒன்றுடன் மேடை மீது ஏறிய மாணவர் ஒருவர், அங்கிருந்த அபர்ணாவிடம் அந்தப்பூவை கொடுத்தார்.
ட்ரெண்டிங் செய்திகள்
அதை அபர்ணா வாங்கி கொண்டதுதான் மிச்சம், அவரது கையை பிடித்து இழுத்த அந்த மாணவர், அபர்ணாவின் தோளில் கை போட்டு புகைப்படம் எடுக்க முயன்றார். அவரின் நடவடிக்கையில் அதிருப்தியடைந்த அபர்ணா, அதனை அனுமதிக்க வில்லை; இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவ, மாணவரின் செயலை அனைவரும் கடுமையாக விமர்சித்தனர். மேலும் சம்பந்தப்பட்ட மாணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இதனை ஏற்றுக்கொண்ட சட்டக்கல்லூரி பணியாளர் கவுன்சில் நடிகையிடம் அத்துமீறிய மாணவரை ஒருவாரம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது; மேலும், இந்த சம்பவம் தொடர்பாக அறிக்கை வெளியிட்ட எர்ணாகுளம் சட்டக் கல்லூரி யூனியன் நடிகையிடம் மன்னிப்புக்கோரியது. இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக முதன்முறையாக தனியார் ஊடகம் ஒன்றிற்கு பேசி இருக்கிறார் நடிகை அபர்ணா. இது குறித்து
அவர் பேசும் போது, “ஒரு சட்டக்கல்லூரி மாணவன் ஒரு பெண்ணை அவளது அனுமதியின்றி தொடுவது சரியானது அல்ல என்பதை புரிந்து கொள்ளாதது துயரமானது; என் கையை அவர் பிடித்து வலுக்கட்டாயமாக எழுப்பியதும் சரியானது அல்ல; அத்துடன் என்னுடைய தோளிலும் அவர் கைவைக்க முயன்றார். இது ஒரு பெண்ணை அணுகுவதற்கான சரியான நடத்தை இல்லை; எனக்கு நேரமில்லை என்பதால் நான் அந்த சம்பவம் குறித்து புகார் அளிக்க வில்லை; அதே நேரம் மாணவனின் நடத்தைக்கு என்னுடைய அதிருப்தியையும், எதிர்ப்பையும் தெரிவித்து பதிலடி கொடுத்தேன்; விழா ஏற்பாட்டாளர்களால் எனக்கு எந்த பிரச்சினையும் ஏற்பட வில்லை; அவர்கள் நடந்த சம்பவத்திற்கு உடனடியாக மன்னிப்புக்கோரினர்” என்று பேசியுள்ளார்.
முன்னதாக, சூரரைப் போற்று படத்தில் அபர்ணா பாலமுரளி தனது சிறப்பான நடிப்பிற்காக தேசிய விருது பெற்றார். அதனைத்தொடர்ந்து நித்தம் ஒரு வானம் படத்தில் நடித்து பாராட்டை பெற்றார். இந்த நிலையில அவர் நடிப்பில் உருவாகி இருக்கும் தங்கம் திரைப்படம் வரும் வரும் 26 ஆம் தேதி வெளியாக உள்ளது. அதனால் படக்குழுவினர் மிகவும் பிஸியாக விளம்பர பணியில் ஈடுபட்டு வருகின்றனர் மலையாளத்தில் தொடர்ந்து பிஸி ஹீரோயினாக வலம் வரும் அபர்ணா பாலமுரளி தற்போது ஃபஹத் ஃபாசிலுக்கு ஜோடியாக ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிக்கும் தூம் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்துடன் மேலும் ஆறு படங்களை ஒப்புக்கொண்டுள்ளார் அபர்ணா பாலமுரளி.
டாபிக்ஸ்