‘அல்லு அர்ஜூன் கைது.. இது முதல்வர் செய்த விளம்பரம்.. ஆச்சர்யமா இருக்கா’- வம்பிழுக்கும் டைரக்டர்
வார இறுதி நாட்களில் புஷ்பா 2 தி ரூல் படத்தின் வசூலை அதிகரிக்க நினைத்து தெலங்கான முதல்வர் அல்லு அர்ஜூனை கைது செய்திருக்கிறார் என இயக்குநர் ராம் கோபால் வர்மா தெரிவித்துள்ளார்.

'புஷ்பா 2 படத்தின் வசூலை அதிகரிக்க செய்த விளம்பரம் தான் இது'.. முதல்வரை சீண்டும் டைரக்டர்
கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி, அல்லு அர்ஜுன் தனது புஷ்பா 2: தி ரூல் படத்தின் பிரீமியர் காட்சிகளைக் காணவந்த ரசிகர்களை உற்சாகமூட்டும் விதமாக சந்தியா தியேட்டருக்கு விசிட் வந்தார்.
ரசிகை மரணம்- அல்லு அர்ஜூன் கைது
அப்போது அவரைக் காண அவரது ரசிகர்கள் முந்தி அடித்துக் கொண்டு சென்றதால் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் தியேட்டருக்குள் வந்து நெரிசல் ஏற்பட்டு நிலமை கை மீறி சென்றது.
இது ஒரு பெண்ணின் மரணத்திற்கும் அவரது மகனை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்ப்பதற்கும் வழிவகுத்தது. இதையடுத்து அல்லு அர்ஜுன் மற்றும் தியேட்டர் நிர்வாகத்தின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அல்லு அர்ஜூனை கைது செய்து பின் ஜாமீனில் அனுப்பி வைத்தனர்.
