சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம்..உரிமை கேட்டுப் போராடும் தொழிலாளர்களை போராட விடு - பா. ரஞ்சித்
சாம்சங் தொழிலாளர்கள் கைது விவகாரத்தில் உரிமை கேட்டுப் போராடும் தொழிலாளர்களை போராட விடு என இயக்குநர் பா. ரஞ்சித் கூறியிருப்பதோடு, தமிழக அரசியின் செயல்பாடுகளையும் விமர்சித்துள்ளார்.

சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் விவகாரத்தில் தொழிலாளர்களின் போராட்டத்துக்கு ஆதரவாகவும், இந்த விவகாரத்தில் தமிழக அரசின் செயல்பாட்டை விமர்சித்தும் இயக்குநர் பா. ரஞ்சித் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பா. ரஞ்சித் தனது எக்ஸ் பக்கத்தில், "தொழிற்சங்கம் என்பது ஒரு தொழிலாளியின் அடிப்படை உரிமையாகும். இப்படி தொழிற்சங்கம் வேண்டியும், சிறந்த பணிச்சூழலுக்காகவும் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக வேலைநிறுத்தம் செய்து வரும் சாம்சங் தொழிலாளர்கள் தங்களது சட்டப்பூர்வ உரிமைகளுக்கு உட்பட்டு வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர்.
தொழிலாளர்களை போராட விடு
தமிழக அரசு இதை மதிக்காமல், தனியார் நிறுவனத்துக்கு சாதகமாக நடந்து கொள்வது மிக மோசமான அனுகுமுறை. தொழிலாளர்கள் அமைதியான முறையில் வேலைநிறுத்தம் செய்து வரும் போராட்டக்களத்தை அரசு அகற்றுவதில் எந்த நியாயமும் இல்லை.