Pavithra: 'விபத்தில் முகம் சிதைவு'.. குக் வித் கோமாளி பவித்ரா உருக்கம்
எதிர்பாராத விபத்தால் தன் முகம் மோசமானது என குக் வித் கோமாளி பவித்ரா உருக்கம் தெரிவித்து உள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் யார் கலந்து கொண்டாலும் மிகவும் பிரபலம் ஆகின்றன. அதனால் பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கிறது.
ட்ரெண்டிங் செய்திகள்
இதனிடையே குக் வித் கோமாளி இரண்டாவது சீசனில் கலந்து கொண்டவர் பவித்ரா. இவர் கோமாளியாக இருக்கும் புகழுடன் இணைந்து பல்வேறு நகைச்சுவைகளை செய்து மிகவும் பிரபலமானார். அது ரசிகர்களிடம் வரவேற்பையும் பெற்றது.
இதன் மூலம் கிடைத்த புகழால் அவர் கடந்த 2022 ஆம் ஆண்டு நடிகர் சதீஷ் நடிப்பில் வெளியான நாய் சேகர் படத்தில் ஹீரோயினாக நடித்தார். இதுவே அவரின் முதல் திரைப்படம் ஆகும். இவர் தற்போது தமிழ் மட்டுமே மலையாள திரைப்படங்களிலும் நடித்த வருகிறார்.
இந்நிலையில் பவித்ரா சமீபத்தில் கலந்துகொண்டு பேட்டியில் பவித்ரா தான் விபத்தில் சிக்கி எப்படி தவித்தேன் என்பதை குறித்து மிகவும் உருக்கமாக பேசி இருக்கிறார்.
அவர் கூறுகையில், " எனக்கு சினிமாவிற்கு வர வேண்டும் என்று சின்ன வயசுல இருந்தே ஆசை. அம்மாவிடம் என்னது ஆசையை கூறினேன். ஆனால் அவர் பயந்து கொண்டு நீ படிக்கும் வேலையை மட்டும் பார்த்தால் போதும். படித்து முடித்து நல்ல வேலைக்கு செல் என்று கூறி விட்டார். நானும் அம்மா தனக்காக எவ்வளவு சிரமப்படுகிறார் என்பதை புரிந்து கொண்டு படிப்பில் மட்டும் கவனத்தை செலுத்தினேன்.
பிறகு சென்னை வந்த போது எதிர்பாரா விதமாக எனக்கு பெரிய விபத்து ஏற்பட்டது. அதில் எனது முகம் அறுவை சிகிச்சை முடிந்த பிறகு என்னாலேயே பார்க்க முடியவில்லை. இதைப் பற்றி நான் என் அம்மாவிடம் சொல்லவில்லை " என்றார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்