பாற்கடலை கடைந்து சமுத்திரராஜன் பிடியில் சிக்கியிருக்கும் லட்சுமியை மீட்பாரா நாரயணர்? லட்சுமி நாராயணா நமோ நமஹ இந்த வாரம்
நாராயணரை பழிவாங்க காத்திருக்கும் சமுத்திரராஜன் மற்றும் அவரது மனைவியின் சூழ்ச்சி வலையில் சிக்கிக்கொள்கிறார் லட்சுமி. பாற்கடலை கடைந்து லட்சுமியை மீட்க நாராயணர் போராடும் காட்சிகளுடன் லட்சுமி நாராயணா நமோ நமஹ வரும் வாரம் எபிசோடு காட்சிகள் அமையவுள்ளன

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில், மிகப் பிரமாண்டமாகவும் பார்ப்போரை ஈர்க்கும் வகையில் மிகுந்த சுவாரஸ்யத்தோடும் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு ஒளிப்பரப்பாகி வருகிறது ”லட்சுமி நாராயணா நமோ நமஹ” ஆன்மிகப் புராண தொடர். இந்த வாரம் வரும் வாரம் என்ன நடக்க போகிறது என்பதை பார்க்கலாம்.
அசுரனை வதம் செய்ய முடியாமல் திணறும் நாரயணர்
அசுரன் ஹயக்ரீவன் நாராயணரை பழிவாங்க நாராயணர் தோற்றுவித்த புது உலகத்தினுள்ளே நுழைகிறான். அங்கு சிவன் மற்றும் தேவர்கள் முன்னிலையில் நாராயணரை யுத்தத்துக்கு அழைக்கிறான். லட்சுமியை எனக்கானவள் என்று கூறி நாராயணரை ஏளனப்படுத்துகிறான். லட்சுமிக்கு, அசுரனின் வார்த்தையை கேட்டதும் ஆத்திரம் பீறிட்டு வருகிறது. நாராயணரிடம் அசுரன் ஹயக்ரீவனை வதம் செய்யுங்கள் என்று வேண்டுகிறார்.
நாராயணர் அம்பு தொடுத்து ஹயக்ரீவனின் தலையை கொய்து எறிகிறார். ஆனால் ஹயக்ரீவனின் தலை தானாக பழையாபடி கழுத்துடன் வந்து இணைந்து கொள்கிறது. நாராயணர் அசுரனை வதம் செய்ய முடியாமல் திணறுகிறார். அப்போது சிவன் நாராயணரிடம் ”ஹயக்ரீவன் ஆதிசக்தியிடம் வரம் வாங்கி வந்தவன் அவனை அவ்வளவு சீக்கிரத்தில் அழிக்க முடியாது” என்கிறார். அந்த சமயத்தில் ஹயக்ரீவன் அம்பு எய்து நாரயணரின் தலையை கொய்து விடுகின்றான். உடனே தலையில்லாத நாராயணரை பார்த்து கேலியாக சிரித்தபடி லட்சுமியிடம் ”எனக்கு என்னால் மட்டுமே அழிவு வேறு எவராலும் என்னை அழிக்க முடியாத. இந்த சவத்தை விட்டு என்னோடு வந்துவிடு” என்று கூறுகிறான்.
