வைகுந்தத்தில் நாராயணர் - லட்சுமி விவாகம்.. தடுக்க முயற்சிக்கும் அசுரன் ஹயக்ரீவன்! லட்சுமி நாராயணா நமோ நமஹ இந்த வாரம்
வைகுந்தத்தில் நாராயணர் - லட்சுமி விவாகம் நடைபெற இருக்க, அதை தடுக்க முயற்சிக்கிறான் அசுரன் ஹயக்ரீவன். இதன் பின்னர் நடந்தது என்ன என்பதை காட்டும் விதமாக லட்சுமி நாராயணா நமோ நமஹ இந்த வார எபிசோட் காட்சிகள் இடம்பெறவுள்ளன.

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் மிகப் பிரமாண்டமாகவும் காண்போரை ஈர்க்கும் வகையில் மிகுந்த சுவாரஸ்யத்தோடும் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு ஒளிப்பரப்பாகி வருகிறது "லட்சுமி நாராயணா நமோ நமஹ" ஆன்மீகப் புராண தொடர் இருந்து வருகிறது.
இதையடுத்து இந்த வாரத்துக்கான எபிசோட் அப்டேட்டை பார்க்கலாம். நாராயணருக்கும் லட்சுமிக்கும் வைகுந்தத்தில் விவாகம். இந்த விவாகத்தை தடுத்து அசுரன் ஹயக்ரீவன் லட்சுமியை அடைய முயற்சிக்கிறார். நாரயணருக்கும் லட்சுமிக்கும் விவாகம் நடந்ததா என்பது காண்பிக்கப்படவுள்ளது.
லட்சுமியை அடையை நினைக்கும் ஹயக்ரீவன்
சிவன் பிரம்மா மற்றும் தேவர்கள் முன்னிலையில் அசுரன் ஹயக்ரீவன் தன் அசுரப்படைகளோடு வந்து லட்சுமி தனக்குத்தான் வேண்டும். நான் தான் விவாகம் செய்வேன் என்று பேராட்டம் செய்கிறான். நாராதர் மூலம் சேதி அறிகிறார் நாராயணர். நேராக லட்சுமியுடன் சிவனிடம் வருகிறார். அசுரன் ஹயக்ரீவனுக்கு, நாராயணர் லட்சுமி ஆதியில் யார் என்று எடுத்துச் சொல்லி கர்மாவால் மட்டுமே லட்சுமியை அடைய முடியும் என்றும் புரிய வைக்கிறார். மேலும் தான் மட்டுமே லட்சுமியை அடைய தகுதியானவன் என்றும் கூறுகிறார். இருப்பினும் அசுரன் கேட்பதாக இல்லை.