லட்சுமியை கடத்த முயற்சிக்கும் அசுரன் ஹயக்ரீவன்! நாராயணர் காப்பாற்றினாரா? இந்த வாரம் லட்சுமி நாராயணா நமோ நமஹ எபிசோட்
லட்சுமியை கடத்த முயற்சிக்கும் அசுரன் ஹயக்ரீவன், அவர் காப்பாற்ற நாராயணர் என்ன செய்ய போகிறார்? லட்சுமியின் இக்கட்டான நிலை நிவர்த்தியாயிற்றா? இப்படி பல திருப்பங்களுடன் இந்த வார லட்சுமி நாராயணா நமோ நமஹ தொடர் விறுவிறுப்பாக செல்கிறது.

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில், மிகப் பிரமாண்டமாகவும் பார்ப்போரை ஈர்க்கும் வகையில் மிகுந்த சுவாரஸ்யத்தோடும் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு ஒளிப்பரப்பாகி வருகிறது ”லட்சுமி நாராயணா நமோ நமஹ” என்ற ஆன்மிகப் புராண தொடர்.
ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வரும் லட்சுமி நாராயணா நமோ நமஹ இந்த வாரம் லட்சுமியை அடைய ஆசைப்படும் அசுரன் ஹயக்ரீவனிடமிருந்து நாராயணர் லட்சுமியை காப்பாற்ற எடுக்கும் முயற்சியை பற்றியை காட்சிகளுடன் இடம்பெறுகிறது.
நாரயணரை பிரிந்து செல்லும் லட்சுமி
நாராயணர் தாமரை மலரில் லட்சுமியை தோற்றுவித்து, தன்னோடு இணைந்து பிரபஞ்ச கடமையை செய்யும்படி கேட்கிறார். அந்த நேரம் மரத்தில் தாய்ப்பறவையை, இன்னொரு வலிய பறவை வேட்டையாடுகிறது. லட்சுமி மரக்கூட்டில் குஞ்சுகள் தவிப்பதைக் கண்டு நாராயணரிடம் காப்பாற்றும்படி கெஞ்சுகிறார். நாராயணரோ மௌனம் சாதிக்கிறார். வலிய பறவை தாய்ப்பறவையை வேட்டையாடிச் சென்று விடுகிறது.