சூடுபிடிக்கும் தமிழக வெற்றிக் கழக மாநாட்டுப் பணிகள்.. பாதுகாப்புக்காக 10ஆயிரம்பேர் கொண்டு ரசிகர் படை.. புஸ்ஸி ஆனந்த்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  சூடுபிடிக்கும் தமிழக வெற்றிக் கழக மாநாட்டுப் பணிகள்.. பாதுகாப்புக்காக 10ஆயிரம்பேர் கொண்டு ரசிகர் படை.. புஸ்ஸி ஆனந்த்

சூடுபிடிக்கும் தமிழக வெற்றிக் கழக மாநாட்டுப் பணிகள்.. பாதுகாப்புக்காக 10ஆயிரம்பேர் கொண்டு ரசிகர் படை.. புஸ்ஸி ஆனந்த்

Marimuthu M HT Tamil Published Oct 24, 2024 05:41 PM IST
Marimuthu M HT Tamil
Published Oct 24, 2024 05:41 PM IST

சூடுபிடிக்கும் தமிழக வெற்றிக் கழக மாநாட்டுப் பணிகள்.. பாதுகாப்புக்காக 10ஆயிரம்பேர் கொண்டு ரசிகர் படை உருவாக்கப்பட்டதாக புஸ்ஸி ஆனந்த் தகவல் தெரிவித்துள்ளார்.

சூடுபிடிக்கும் தமிழக வெற்றிக் கழக மாநாட்டுப் பணிகள்.. பாதுகாப்புக்காக 10ஆயிரம்பேர் கொண்டு ரசிகர் படை.. புஸ்ஸி ஆனந்த்
சூடுபிடிக்கும் தமிழக வெற்றிக் கழக மாநாட்டுப் பணிகள்.. பாதுகாப்புக்காக 10ஆயிரம்பேர் கொண்டு ரசிகர் படை.. புஸ்ஸி ஆனந்த்

தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கப்பட்டுவிட்டாலும், தமிழக வெற்றிக் கழகம் கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை என்றும், யாருக்கும் ஆதரவளிக்கவும் இல்லை. அதே நேரத்தில் 2026 சட்டமன்றத்தேர்தலில் விஜய் போட்டியிடப்போவதாகவும், ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள படங்களை முடித்துவிட்டு, முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் விஜய் தெரிவித்திருந்தார். இதன் மூலம் விஜய்யின் குறிக்கோள் 2026 சட்டப்பேரவைத் தேர்தல் என்பது தெளிவாகத் தெரிந்தது.

அதனைத்தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தில், உறுப்பினர் சேர்க்கையில் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு வைத்து வேலை செய்துவருகின்றனர், அக்கட்சி நிர்வாகிகள். மேலும், உறுப்பினர் சேர்க்கைக்காக , ’’தமிழக வெற்றிக் கழகம்’’ என்னும் செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது. அதில் தமிழக வெற்றிக் கழகம், தனக்கான உறுப்பினர் சேர்க்கையை கடந்த மார்ச் 8ஆம் தேதி தொடங்கியது.

விறுவிறுப்பாக நடைபெறும் தமிழக வெற்றிக்கழக உறுப்பினர் சேர்க்கை:

தொடங்கிய மூன்றே நாட்களில் அந்த கட்சியில் 50 லட்சம் பேர் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். தவிர, தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் உறுப்பினர்கள் சேர்க்கையில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும், நாம் தமிழர் கட்சியும் மாநிலக் கட்சிகளாக அங்கீகரிக்கப்பட்ட நிலையில், அதற்கு நடிகரும் தமிழக வெற்றிக் கழத்தின் தலைவருமான விஜய்யும் வாழ்த்துத் தெரிவித்திருந்தார்.

அடுத்து கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணங்கள் நிகழ்ந்த பகுதிக்கு நேரடியாக சென்று, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். அண்மையில் 10, 12ஆம் வகுப்புகளில் மாவட்ட அளவில், ஊரக அளவில் முதலிடம் பெற்றவர்களை விஜய் விழாவாக ஏற்பாடு செய்து கெளரவித்தார்.

மூன்று தலைவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் விஜய்:

மேலும் பி.ஆர்.அம்பேத்கர், பெரியார் ஈ.வே.ராமசாமி மற்றும் காமராஜ் போன்ற தலைவர்கள் மற்றும் அவர்களின் லட்சியங்களைப் பற்றி படிக்குமாறு மாணவர்களை வலியுறுத்தினார். கன மழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்த தென் மாவட்டங்களுக்கு சென்று, அவர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்தார்.

அதன் அடுத்தகட்டமாக, சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை, அக்கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய் அறிமுகம் செய்துவைத்தார். மேலும் தமிழக வெற்றிக் கழகம் தொடர்பான பாடலையும் வெளியிட்டார். அப்போது, தமிழக வெற்றிக் கழகத்திற்கு அங்கீகாரம் கிடைத்ததை அக்கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய் உறுதி செய்தார்.

இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு வரும் அக்டோபர் 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடக்கும் என அறிவிக்கப்பட்டது. அதற்கான ஆயத்தப்பணிகள் விக்கிரவாண்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

புஸ்ஸி ஆனந்த் பேச்சு:

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம்பேசிய தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பேசுகையில், ‘’ அனைத்து வேலைகளும் நடந்து கொண்டிருக்கிறது. சிசிடிவி கேமரா எல்லா இடங்களிலும் போடுகிறோம். காவல் துறையே எங்கள் மாவட்டத் தலைவர்களிடம் பேசி, எத்தனை பேர் வருகிறார்கள் என்பதைக் கண்காணித்து வருகின்றனர். உணவு, குடிநீர், டாய்லெட் வசதி என அனைத்தும் மக்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் மக்களுக்குப் பாதிப்பு வரக்கூடாது என தளபதி அறிவுறுத்தியிருக்கிறார்.

எல்லா பார்க்கிங் பணிகளும் காவல் துறை சொல்லியபடி, நாங்கள் ஏற்பாடு செய்து வருகிறோம். போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், செங்கல்பட்டில் இருந்து வருபவர்களுக்கு தனி கார் பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 150 மருத்துவர்கள் மற்றும் 10 ஆயிரம் ரசிகர் படை பாதுகாப்புக்காக நிறுத்தப்படவுள்ளனர்’’ என புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

இதனிடையே என்னை பணி செய்ய விடுங்கள் என புஸ்ஸி ஆனந்த் கேட்டதால், பத்திரிகையாளருக்கும் புஸ்ஸி ஆனந்துக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.