பிக்பாஸில் காத்திருக்கும் சம்பவம்.. இரவு 9.30 மணிக்கு விஜய் டிவி பக்கம் வந்தால் தீபாவளி பரிசு காத்திருக்கிறது.. அடடே!
பிக்பாஸ் பார்வையாளர்களுக்கு தீபாவளி பரிசாக 5 போட்டியாளர்களை வைல்டுகார்டு சுற்று மூலம் வீட்டிற்குள் அனுப்ப பிக்பாஸ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பிக்பாஸ் சீசன் 8 தொடர் கடந்த 6ம் தேதி தொடங்கியது. இந்த சீசன் தொடங்கிய நாள் முதலே பஞ்சாயத்துக்கு பஞ்சமில்லாமல் இருந்த நிலையில், தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி 2வது வாரத்தை நிறைவு செய்துள்ளது.
கடந்த ஒரு வாரமாக வீட்டில் நடந்த அனைத்து விஷயங்களையும் கவனித்து வந்த விஜய் சேதுபதி, போட்டியாளர்கள் அனைவரையும் வைத்து செய்துள்ளார். பிக்பாஸ் வீட்டில் கடந்த வாரம் போட்டியாளர்கள் விளையாடாமல் சாப்பிட்டு தூங்கிக் கொண்டிருந்தனர் என விஜய் சேதுபதி காட்டமாகவே விமர்சித்திருந்தார். மேலும், இங்குள்ள போட்டியாளர்கள் தங்களின் தனித்திறனை வெளிப்படுத்தாமலே இருக்கின்றனர். அவர்கள் ஒருவர் முதுகிற்கு பின் மற்றொருவர் என ஒழிந்து கொள்ள நினைக்கின்றனர் எனவும் குற்றம்சாட்டியிருந்தார்.
கட்டம் கட்டிய போட்டியாளர்கள்
இந்நிலையில், போட்டியாளர்கள் அனைவரும் அவர்களின் ஆட்டத்தை ஆரம்பித்தனர். 2ம் வாரத்தில் பெண்கள் அணியிலிருந்து ஆண்கள் அணிக்கு மாறிய தர்ஷா அங்குள்ளவர்களை வைத்து செய்து கொண்டிருந்தார். முத்து, ரவீந்தர் இல்லாத இடத்தை பூர்த்தி செய்து வந்துள்ளார். இதுவரை இருந்த இடமே தெரியாமல் இருந்த சத்யா தற்போது வீட்டின் கேப்டன் ஆகி உள்ளார்.