விருதுகளைப் பெற்று சுமைதாங்கியாக நிற்கும் அர்னவ்.. கிழித்து தொங்கவிட்ட விஜய் சேதுபதி..
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  விருதுகளைப் பெற்று சுமைதாங்கியாக நிற்கும் அர்னவ்.. கிழித்து தொங்கவிட்ட விஜய் சேதுபதி..

விருதுகளைப் பெற்று சுமைதாங்கியாக நிற்கும் அர்னவ்.. கிழித்து தொங்கவிட்ட விஜய் சேதுபதி..

Malavica Natarajan HT Tamil
Published Oct 20, 2024 06:47 PM IST

பிக்பாஸ் போட்டியில் வழங்கப்பட்ட அனைத்து விருதுகளையும் போட்டியாளர்கள் அர்னவ்விற்கு அளித்ததால், அவரை விஜய் சேதுபதி கேள்விகளாக கேட்டு துளைத்து வருகிறார்.

விருதுகளைப் பெற்று சுமைதாங்கியாக நிற்கும் அர்னவ்.. கிழித்து தொங்கவிட்ட விஜய் சேதுபதி..
விருதுகளைப் பெற்று சுமைதாங்கியாக நிற்கும் அர்னவ்.. கிழித்து தொங்கவிட்ட விஜய் சேதுபதி..

அசிங்கப்படும் அர்னவ்

பிக்பாஸ் 14 ஆவது நாளான இன்று விஜய் சேதுபதி அர்னவ்வை கேள்வியால் அசிங்கப்படுத்தி வருகிறார். பிக்பாஸ் வீட்டில் நடைபெற்ற போட்டியில் ஆடியன்ஸ் வாட்சிங் ஆடியன்ஸ், குரூப்ல டூப்பு, டம்மி பாவா, ட்ராமா குயின் போன்ற பல விருதுகள் வழங்கப்பட்டது. இந்த விருதுகளை பெற்றவர்கள், தான் அந்த விருதுக்கு தகுதியானவன் அல்ல என நினைத்தால், அந்த விருதை வீட்டிலுள்ள வேறு யாருக்காவது பரிந்துரைக்கலாம் என விஜய் சேதுபதி கூறினார்.

சுமைதாங்கி

இதைக் கேட்ட ஜெஃப்ரி தான் வாங்கிய ஆடியன்ஸ் வாட்ச் ஆடியன்ஸ் விருதிற்கு நான் பொருத்தமானவன் இல்லை. அதை அர்னவ்விற்கு கொடுக்கிறேன் எனக் கூறினார். இதைத் தொடர்ந்து, கேப்டன் சத்யா வாங்கிய குரூப்ல டூப்பு விருதையும் அவர் அர்னவ்விற்கு அளித்துள்ளார். மேலும், முத்துக்குமரன் வாங்கிய டம்மி பாவா, தீபக்கின் ட்ராமா குயின் போன்ற விருதுகளும் அர்னவ்விற்கு வழங்கப்பட்டது.

பெருமையாக பேசிய அர்னவ்

இதுகுறித்து விஜய் சேதுபதி அர்னவ்விடம் கேள்வி எழுப்புகிறார், இதுகுறித்து பதிலளித்த அர்னவ் இத்தனை விருதுகளையும் பெற்றது பெருமையாக இருக்கிறது எனக் கூறினார். அர்னவ்வின் இந்த வார்த்தையை கேட்டு கடுப்பான விஜய் சேதுபதி, இதில் பெருமைப்பட என்ன இருக்கிறது. விளையாட கொடுத்த நேரத்தை தவறவிட்டுவிட்டு இப்போது பெருமையாக இருக்கிறது எனக் கூறினால் என்ன அர்த்தம் எனக் கேட்டு மிகவும் கடுப்பாகியுள்ளார்.

வெளியேறும் அர்னவ்

ஏற்கனவே, பிக்பாஸ் 2ம் வாரத்தில் வீட்டை விட்டு வெளியேறப் போவது அர்னவ் தான் என செய்திகள் பரவிய நிலையில், அர்னவ்வின் பதில் அதற்கு தகுந்தாற்போல் அமைந்துள்ளது. அதுமட்டுமின்றி, முதல் வாரத்தில் ரவீந்தர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டபோது, ஆண்கள் அணி மொத்தமும் ஒன்றுகூடி அவர் மீது பழியைப் போட்டுவிட்டனர். தற்போது அர்னவ் விவகாரத்திலும் இதே செயல் மீண்டும் நடப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சிக்கிய ஜாக்குலின்

முன்னதாக வெளியான ப்ரோமோவில், ஜாக்குலின் தன்னை எல்லாரும் டார்கெட் செய்து பல செயல்களை செய்வதாக குற்றம் சாட்டியிருந்தார். ஜாக்குலினின் குற்றச்சாட்டுகள் எதுவும் நியாயமானது இல்லை எனவும், அவர் முழுக்க முழுக்க செய்து தவறுகளுக்காக மட்டுமே தண்டிக்கப்பட்டார் எனவும் விஜய் சேதுபதி தெரிவிக்கிறார்.

அதை தொடர்ந்து இன்று, ஜாக்குலின் விதிமுறைகளை மீறியது குறித்து பேசப்படுகிறது. இதில் ஜாக்குலின் செய்த தவறு குறித்து விஜய் சேதுபதி ஒவ்வொரு விஷயமாக முன்னெடுத்து வைத்தார். இதனால் இன்றைய எபிசோட் விறுவிறுப்பாக இருக்கும் எனத் தெரிகிறது.

பிக்பாஸ் வீட்டிற்கு என உள்ள விதிகளை மீறியதற்காக உங்களுக்கு தண்டனை கொடுத்துள்ளார்கள். ஆனால் அதனை நீங்கள் டுவிஸ்ட் செய்து , 'என்னை அனைவரும் டார்கெட் செய்கிறார்கள் என்று சொல்வது தவறு எனக் கூறுகிறார். நடந்த விஷயத்தை விசாரித்தால், அதில் உங்களுடைய தவறும் இருக்கிறது என ஜாக்குலினை வெளுத்து வாங்கியுள்ளார் விஜய் சேதுபதி.