நான் பயங்கர டேஞ்சர் ஜோனில் இருக்கிறேன்.. பெண்கள் அணியில் இருந்து யார் காப்பாற்றபடுவார்.. யாருக்கு ஆதரவு அதிகம்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  நான் பயங்கர டேஞ்சர் ஜோனில் இருக்கிறேன்.. பெண்கள் அணியில் இருந்து யார் காப்பாற்றபடுவார்.. யாருக்கு ஆதரவு அதிகம்!

நான் பயங்கர டேஞ்சர் ஜோனில் இருக்கிறேன்.. பெண்கள் அணியில் இருந்து யார் காப்பாற்றபடுவார்.. யாருக்கு ஆதரவு அதிகம்!

Divya Sekar HT Tamil Published Oct 18, 2024 12:52 PM IST
Divya Sekar HT Tamil
Published Oct 18, 2024 12:52 PM IST

Bigg Boss Tamil 8 : பிக் பாஸ் சீசன் 8-ன் 12 ஆம் நாளின் இரண்டாவது ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது. இதில் பெண்கள் அணியில் இருந்து யார் காப்பாற்றபடுவார் என்ற வகையில் இந்த ப்ரோமோ அமைந்தது.

நான் பயங்கர டேஞ்சர் ஜோனில் இருக்கிறேன்.. பெண்கள் அணியில் இருந்து யார் காப்பாற்றபடுவார்.. யாருக்கு ஆதரவு அதிகம்!
நான் பயங்கர டேஞ்சர் ஜோனில் இருக்கிறேன்.. பெண்கள் அணியில் இருந்து யார் காப்பாற்றபடுவார்.. யாருக்கு ஆதரவு அதிகம்!

சச்சனா திரும்பவும் அந்த நிலைமையில் நிற்க நான் ஆசைப்படல என சொல்ல அவரை தொடர்ந்து பேசிய சௌந்தர்யா எனக்கான சூழ்நிலை இன்னும் வரவில்லை என எனக்கு தோன்றுகிறது ஏதோ ஒன்று பண்ண வேண்டும் என நினைக்கிறேன் ஆனால் பண்ண முடியவில்லை என சொல்கிறார்.

அதிக சப்போட்டர்ஸ் யாருக்கு

இதனைக் கேட்ட பிக் பாஸ் இந்த நான்கு பேரில் இருந்து யாராவது ஒருத்தரை உங்களால் காப்பாற்ற முடியும் என சொல்ல இதற்கு ஆனந்தி இந்த நான்கு பேரில் யார் காப்பாற்றப்பட்டார் என்று சொல்ல வேண்டுமானால் என சொல்ல தொடங்குகிறார் இதோடு இந்த ப்ரோமோ முடிவடைகிறது.

சௌந்தர்யாவுக்கு வெளியில் அதிக சப்போட்டர்ஸ் இருக்கிறார்கள் எனவே அவர் காப்பாற்றப்படுவார். இந்த முறை சாச்சனா செல்ல அதிக வாய்ப்பு இருக்கிறது எனவே சாச்சசனாவை காப்பாற்றுவார்களா? பெண்கள் அணி என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ஆரம்பம் முதலே ஸ்கோர்

பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி கடந்த 6ஆம் தேதி தொடங்கியது. மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், கடந்த வாரம் ரவீந்தர் சந்திரசேகர் வெளியேறினார். தற்போது 17 போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர்.பிக்பாஸ் நிகழ்ச்சியில், கடந்த வாரம் போட்டியாளர்கள் மக்களை சரியாக என்டர்டெயின் செய்யவில்லை என்று புதிதாக தொகுப்பாளராக களமிறங்கி இருக்கு விஜய்சேதுபதி வறுத்தெடுத்த நிலையில், இந்த வாரம் உஷாரான போட்டியாளர்கள், ஆரம்பம் முதலே ஸ்கோர் செய்யும் வகையில் விளையாட ஆரம்பித்தனர். சிலர் தனியாகவும், பலர் அணியாகவும் தங்களை ஸ்கோர் செய்து கொண்டிருக்கின்றனர்.

திறைமைகளை வெளிபடுத்திய போட்டியாளர்கள்

போட்டி போட்டு கொண்டு இருந்த இரு அணிகளும் நேற்று ஜாலியாக விளையாடினர். நேற்று போட்டியாளர்கள் பாடல் பாடியதும், நடித்தும் தங்கள் திறைமைகளை வெளிப்படுத்தினர். இதில் தொகுப்பாளர் முத்துக்குமரனின் நடிப்பு வெகுவாக பலரையும் ஈர்த்தது. தொகுப்பாளர் முத்துக்குமரனும், ஆர்.ஜே. ஆனந்தியும் சேர்ந்து சிறிய நாடகத்தை அரங்கேற்றினர். முத்துக்குமரன் சிவாஜி வசனத்தை 4 நிமிடங்கள் பேசினார். காதலும், வீரமும் கலந்த கதை என முத்துக்குமரன் பேசியதும் போட்டியாளர்கள் அனைவரும் மெய்மறந்து கேட்டு கொண்டு இருந்தனர். அவரின் பேச்சி தற்போது சமூக வலைதள பக்கத்தில் வைரல் ஆகி பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது.

நடிப்பை பாதியிலேயே நிறுத்திய அன்ஷிதா

திருமணத்துக்குப் பிறகான தம்பதியின் சோக நிகழ்வை நடிகை பவித்ராவும், தீபக்கும் இணைந்து நடித்துக் காண்பித்தனர். இதில் தீபக் நடிப்பு மிக அருமையாக இருந்ததாக பலர் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

அதேபோல விஜே விஷாலும், அன்ஷிதாவும் நடித்தது பலரிடையே சிரிப்பலையையும் ஏற்படுத்தினாலும், அன்ஷிதா உண்மையாக அழுதுகொண்டு நடிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டார். தனது நிஜ வாழ்க்கையில் நடந்த சம்பவம் நினைவுக்கு வந்ததால், நடிப்பதை நிறுதிவிட்டு அழத்தொடங்கினார். பிக்பாஸ் வீட்டில் இருந்த போட்டியாளர்கள் அவரை சமாதானம் செய்தனர்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.