பிக்பாஸில் முன்ன இருந்த பயம் இப்போ இல்ல.. இது டாமினன்ட்டா தான் இருக்கும்.. வாயைத் திறந்த வனிதா
பிக்பாஸ் சீசன் 8 நேற்று கோலாகலமாக தொடங்கிய நிலையில், இந்நிகழ்ச்சி குறித்து சில முக்கிய விஷயங்களைப் பேசியுள்ளார் வனிதா.

மக்கள் விரும்பும் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றாக இருப்பது விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி. சந்தோஷம், கோபம், நட்பு, காதல், நகைச்சுவை, கொண்டாட்டம், துரோகம், போட்டி, களேபரம் என சுவாரஸ்யத்திற்கு பஞ்சமே இல்லாமல் செல்லும் இந்த நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் கோலாகலமாக தொடங்கியது.
பிக்பாஸ் சீசன் 8 போட்டியாளர்கள்
இந்த நிகழ்ச்சியில், தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர், மஹாராஜா புகழ் சச்சனா, இன்ஸ்டா பிரபலம் தர்ஷா குப்தா, ஆங்க்கர் தீபக், குக் வித் கோமாளி சுனிதா கோகோய், பாடி பில்டர் சத்ய குமார், பாக்கியலட்சுமி புகழ் விஜே விஷால், செல்லம்மா சீரியல் ஹீரோ அர்ணவ், நடிகர் ரஞ்சித், செல்லம்மா சீரியல் ஹீரோயின் அன்ஷிதா, பிரபல மாடல் செளந்தர்யா, பாரதி கண்ணம்மா ஹீரோ அருண், தென்றல் வந்து என்னை தொடும் ஹீரோயின் பவித்ரா ஜனனி, கானா பாடகர் ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, பொன்னி சீரியல் வில்லி தர்ஷிகா, பேச்சாளர் முத்துகுமரன் மற்றும் விஜே ஜாக்குலின் என மொத்தம் 18 போட்டியாளர்கள் களமிறங்கி உள்ளனர்.
களமிறக்கப்பட்ட ஒவ்வொருவரும் தன்னை இந்த சமூகத்திற்கும், தன் மீது விமர்சனங்களை முன்வைத்தவர்களுக்கும் யார் என்று நிரூபிப்பதற்காக விளையாட வந்துள்ளதாக கூறினர். அவர்களுக்கு பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த உடனேயே, டாஸ்க் கொடுக்கப்பட்டது.