Ranjith: 'வன்மமாக முதுகில் குத்துறாங்க.. நான் காதலுக்கு எதிரி கிடையாது.. ஆனால்’: பொங்கிய கவுண்டம்பாளைய நடிகர் ரஞ்சித்
Ranjith: 'வன்மமாக முதுகில் குத்துறாங்க என்றும்; நான் காதலுக்கு எதிரி கிடையாது என்றும் பொங்கிய கவுண்டம்பாளைய நடிகர் ரஞ்சித்தின் பேட்டி வைரல் ஆகியுள்ளது.

Ranjith: நடிகர் ரஞ்சித் இயக்கி நடித்திருக்கும் திரைப்படமான கவுண்டம்பாளையம், ஆகஸ்ட் 9ஆம் தேதியான நேற்று ரிலீஸானது. இந்நிலையில் படம் குறித்து நடந்த பிரஸ் மீட்டில், தன்னை மற்ற சமூகத்தினர் புறக்கணிக்கிறார்கள் என பேட்டியளித்திருக்கிறார்.
‘சாதியை அடிப்படையாகக் கொண்ட படம் கிடையாது கவுண்டம்பாளையம்’:
இதுதொடர்பாக நடிகர் ரஞ்சித் அளித்த பேட்டியில், ‘’சாதியை அடிப்படையாகக் கொண்ட படத்தோட பேர் என்று யோசிக்க வேண்டாம். கவுண்டம்பாளையம் என்பது ஒரு சட்டமன்றத்தொகுதி. கொங்கு மண்டலத்தில் கவுண்டம்பாளையம் என்கிற பல ஊர்கள் இருக்கின்றன. கவுண்டம்பாளையம்னு பெயர் வைச்சதும் இது சாதிப்படம் அப்படிங்கிறது கிடையாது. என்னைப் பற்றி வன்மங்கள் கற்பிக்கனும் இல்லையா?. ஏதாவது சொல்லி மற்ற சமூகத்தினர் என்னைப் புறக்கணிக்க வைக்கனும் அப்படிங்கிறது தான். மேலும்,ஏதாவது சொல்லி, என்னை ஒரு சிறிய டப்பிக்குள்ள அடைக்கவைக்கணும்கிறதாத்தான் இருக்கு. அது மக்களுக்குத் தெரியும். 100 படம் நடிச்சிருக்கேன். இப்போது கூட பாக்யலட்சுமி சீரியல்ல நடிச்சிட்டிருக்கேன். தாய்மார்கள் என்னைப் பார்க்கிறார்கள். மற்ற எந்தவொரு தாய்மாரும் என்னை வெறுப்பதுபோல், ஒருபோதும் நான் நடந்துகொள்ளமாட்டேன்.
சமூக வலைதளத்தில் எங்கிருந்து அடிக்கிறானுங்கன்னு தெரியலை. நான் தான் படத்தின் இயக்குநர். நான் நேர்மையாக இருக்கிறேன். சிலர் என் பெயர் சொல்ல விரும்பாதவங்க, வெறுக்கிறவங்க, மறைமுகமாக ஏதோவொரு பின்புலத்தில் இருந்து முதுகில் குத்தும் செயல்களை செய்துகொண்டு வருகின்றனர்.