உப்பு சப்பு இல்லாமல் செல்லும் பிக்பாஸ்.. அதிரடி முடிவு எடுக்க போகும் பிக்பாஸ்.. அடுத்த என்டரி இவங்களா?
மந்தமாக செல்லும் இந்த நிகழ்ச்சியை சூடுபிடிக்க வைக்க பிக்பாஸ் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளதாக தெரிகிறது. அதுதான் வைல்டு கார்டு என்ட்ரி. இம்முறைய் பழைய போட்டியாளர்களை உள்ளே அனுப்பும் ஐடியாவில் உள்ளாராம் பிக் பாஸ்

விஜய் டிவியின் பிரதான நிகழ்ச்சியான பிக்பாஸ் 8 கடந்த மாதம் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியை கடந்த 7 சீசன்களாக நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில், இந்த முறை “ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு” என நடிகர் விஜய் சேதுபதி தொகுத்த வழங்குகிறார். விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8 வது சீசன் அக்டோபர் 6ம் தேதி தொடங்கி, பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது. இதில் 18 போட்டியாளர்கள் பங்கேற்ற நிலையில் 24 மணி நேரத்தில் சாச்சனா முதல் போட்டியாளராக எலிமெண்ட் செய்யப்பட்டார். பின்னர் அடுத்தவாரமே மீண்டும் எண்டரி கொடுத்தார்.
வைல்டு கார்டு என்ட்ரியாக வந்தவர்களாவது பிக்பாஸ் வீட்டினை சுவாரசியமாக மாற்றுவார்கள் என எதிர்பார்த்த நிலையில், அவர்கள் நிகழ்ச்சியை இன்னும் சொதப்பி வந்தனர். இதனால், பிக்பாஸ் மீதான விருப்பம் மக்கள் மத்தியில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வந்தது.
சுவாரசியமே இல்லாத பிக்பாஸ்
சுவாரசியமே இல்லாத பிக்பாஸ் போட்டியாளர்களை வெளியேற்றும் விதமாக பிக்பாஸ் வீட்டில் வாரம் வாரம் எலிமினேஷனுக்கான நாமினேஷன் நடக்கும். அந்த வகையில், 6வது வாரத்திற்கான நாமினேஷன் பட்டியலில் தீபக், ஜாக்குலின், ஜெஃப்ரி, மஞ்சரி, ராணவ், ரஞ்சித், ரியா, சாச்சனா, சத்யா, சிவக்குமார், சொந்தர்யா, தர்ஷிகா, வர்ஷினி ஆகியோர் இடம் பெற்றனர்.