Bayilvan: லேடீஸ் காலேஜ் வாசலுக்கு தினமும்போகும் நடிகர்.. நடிகையை ரேப் செய்த புகாரில் ஜாமீன் பெற்ற நடிகர்: பயில்வான்
Bayilvan: லேடீஸ் காலேஜ் வாசலுக்கு தினமும்போகும் நடிகர்.. நடிகையை ரேப் செய்த புகாரில் ஜாமீன் பெற்ற நடிகர் குறித்து மூத்த சினிமா பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பேட்டியளித்துள்ளார்.

Bayilvan - பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற ரியாஸ்கான் குறித்தும், முன்ஜாமீன் பெற்ற முக்கிய நடிகர் குறித்தும் பல்வேறு தகவல்களை மூத்த சினிமா பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பேட்டியாகத் தந்துள்ளார்.
இது தொடர்பாக சினிமா மூத்த பத்திகையாளர் பயில்வான் ரங்கநாதன் நியூஸ்டன் யூட்யூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், ‘’சமீபத்தில் சினிமாவில் நடக்கும் பாலியல் பலாத்கார விஷயங்கள் குறித்து விசாரிக்க நீதிபதி ஹேமா தலைமையில் கமிட்டி ஒன்று அமைத்தது. அந்தக் கமிட்டியில் நடிகை சாரதா, ஐஜி உள்ளிட்டப் பலரும் இடம்பெற்றிருந்தனர். அந்தக்கமிட்டியின் அறிக்கை வெகுநாட்களாக, வெளிவராத நிலையில், சமீபத்தில் அந்தக் கமிட்டியின் அறிக்கை வெளியானது. அந்த அறிக்கைக்குப் பின் கேரளத் திரையுலகம் பற்றி எரிகிறது. இந்த அறிக்கைக்குப் பின் கேரள சட்டமன்ற எம்.எல்.ஏவும் நடிகருமான முகேஷ், இயக்குநர் சித்திக், நடிகர் ரியாஸ் கான் உள்ளிட்டப் பல நடிகர்கள் மீது நடிகைகள் பாலியல் சீண்டல் புகார் தெரிவித்து இருந்தது, ஹேமா கமிட்டியின் அறிக்கை மூலம் தெரியவந்தது.
ரியாஸ் கான் மீது வந்த பாலியல் புகார்:
நடிகை ரேகா சம்பத், நடிகர் ரியாஸ்கான் எனக்கு பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றார் என்று கூறினார். அதுமட்டுமின்றி ஆபாசமாக உரையாடி, தன்னை வந்து சந்திக்கும்படியும், தன் தோழிகளை அழைத்துவரும்படியும் ரியாஸ்கான் கூறியதாக ஊடகத்தில் தெரிவித்தார். இதற்கு ரியாஸ் கான், தனக்கு ரேகா சம்பத் யார் என்றே தெரியாது என்றும், தன் பெயரை வைத்து சிலர் கால் செய்திருக்கலாம் என்றும், தான் விசாரணைக்கு தயாராக இருப்பதாகவும் கூறிவிட்டார். அதேபோல், நடிகர் முகேஷ் முன் ஜாமீன் எடுத்துவிட்டார். வழக்கையும் சட்டப்படி,சந்திக்கத் தயார் என்று சொல்லிவிட்டார்.