ரவீந்தரை தொடர்ந்து பிக்பாஸில் இருந்து வெளியேறப் போகும் நபர் யார்? வெளியானது தகவல்
பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் 2வது வாரத்தில், எலிமினேட் செய்யப்படும் நபர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8 வது சீசன் அக்டோபர் 6ம் தேதி தொடங்கி, பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது. இம்முறை கமல்ஹாசனுக்கு பதிலாக, நடிகர் விஜய்சேதுபதி களமிறங்கி இருக்க, அவருக்கே உரித்தான பாணியில் ஆரம்பித்த முதல் நாளிலேயே கவுண்டர்களை அடுக்கி, தன்னை நோக்கி வந்த பால்கள் அனைத்தையும் சிக்சர்களாக பறக்க விட்டுக்கொண்டிருக்கிறார்.
24 மணி நேரத்திற்குள் எலிமினேஷன்
இந்நிலையில், போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த 24 மணி நேரத்திற்குள் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு சாச்சனா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். பின் 3 நாட்கள் மக்களுடன் மக்களாக இந்த விளையாட்டை பார்த்து வந்த சாச்சனா மீண்டும் அதிரடியாக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார்.
ஃபேட்மேன் ரவீந்தர் வெளியேற்றம்
இதையடுத்து, பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களால் ஃபேட் மேன் ரவீந்தர் தனிமைப்படுத்தப்பட்டதாக உணர்ந்தார். இந்நிலையில், ஒரு வாரமாக அவர் செய்த சேட்டைகளின் காரணமாகவும், அவரின் உடல்நிலையை கருத்தில் கொண்டும் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.