இது பிக்பாஸ் வீடா இல்ல..? என்ன பண்ண சொன்னா? என்ன பண்றீங்க.. கோட்டை கழட்டிய விஜய்சேதுபதி.. கடுப்பில் தெறித்த காட்டம்!
பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் நடந்து கொள்ளும் முறை வீக்காக இருப்பதால், வார இறுதி நாளில் வந்திருக்கும் விஜய் சேதுபதி காட்டமாக பேசி இருக்கிறார்.

முதல் எபிசோடில் கோட் சூட் என வந்த விஜய் சேதுபதி, வார இறுதி எபிசோடில் கோட்டை கழற்றிப்போட்டு விட்டு சாதரண ஆடையில் வந்திருக்கிறார். வந்த உடனே காட்டமாக பேச ஆரம்பித்த அவர், போட்டியாளர்கள் கப்புதான் முக்கியம் என்று உள்ளே சென்றார்கள். தற்போது பெட்டுக்கு சண்டைப்போட்டுக்கொண்டிருக்கிறார்கள். கோட்டை போட்டு கேம் விளையாடுங்கள் என்று சொன்னால், நான் உப்புத்தருகிறேன் நீ தண்ணீர் தருகிறாயா? என்றெல்லாம் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
போதைக்குறைக்கு என்னுடைய நூடூல்ஸை காணோம், கொத்துமல்லிக்கெட்டை திருடி விட்டார்கள் என்றெல்லாம் புகார் கூறிக்கொண்டிருக்கிறார்கள். உண்மையாகவே இவர்கள் கேம் ஆடத்தான் உள்ளே சென்று இருக்கிறீர்களா இல்லை டூர் சென்று இருக்கிறார்களா எனக்குத்தெரியவில்லை; இந்த பஞ்சாயத்து என்ன என்பதை பேசி முடித்து விடுவோம் என்று பேசினார்.