ஏ.ஆர்.ரஹ்மான் தனிமையில் இருக்கிறார்.. எத்தன நாளுக்கு சாய்ரா மேம் இப்படியே இருப்பாங்க? கேள்வி எழுப்பும் இசையமைப்பாளர்
மனைவியின் விவாகரத்து அறிவிப்பிற்குப் பின் ஏ.ஆர்.ரஹ்மான் மிகவும் தனிமையில் இருப்பதாக அவருடன் பணியாற்றிய இசையமைப்பாளர் தாஜ் நூர் தெரிவித்துள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மான் தனிமையில் இருக்கிறார்.. எத்தன நாளுக்கு சாய்ரா மேம் இப்படியே இருப்பாங்க? கேள்வி எழுப்பும் இசையமைப்பாளர்
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மனைவி சாய்ரா பானு, தன் கணவரை விட்டுப் பிரிவதாக அவரது வழக்கறிஞர் மூலம் அறிவித்தார். இதையறிந்த ஏ.ஆர்.ரஹ்மான் மனைவியின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து கருத்து தெரிவித்திருந்தார். மேலும், தனிப்பட்ட விஷயங்களுக்கு மதிப்பளிக்குமாறு அவரது மகன் அமீனும் கருத்து தெரிவித்திருந்தார்.
வதந்திகள்
இது பூதாகரமாக வெடித்த நிலையில், பலரும் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் அவரது மனைவி சாய்ரா பானு பிரிவிற்கு பல காரணங்களை பரப்பி வந்தனர். அத்துடன், ஏ.ஆர்.ரஹ்மானை வேறு பெண்ணுடன் தொடர்புபடுத்தியும் பேசி வந்தனர்.
இந்நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் ஸ்டூடியோவில் பணியாற்றிய இசையமைப்பாளர் தாஜ் நூர், இந்த விவகாரம் குறித்து நக்கீரன் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.