Ranveer Singh: பேசிய விஷயம் வேறு! Fake விடியோவால் சிக்கலில் மாட்டிக்கொண்ட ரன்வீர்
ஆமிர்கானை தொடர்ந்து தற்போது ரன்வீர் சிங் குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு ஆதரவு அளிக்கும் வகையில் பேசிய விடியோ ஒன்று வெளியாகி சமூக வலைத்தளத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

வாரணாசியில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்
இந்தியாவை அடுத்து ஆளப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் நாடாளுமன்ற தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற இருக்கிறது. தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில், மொத்தம் 102 தொகுதிகளிக்கு வாக்குப்பதிவானது நடைபெற இருக்கிறது.
மொத்தம் 7 கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளன. ஜூன் 4ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.
இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்களது பிரச்சாரத்தை முடித்திருக்கும் நிலையில், தற்போது பிரபலங்களை டார்கெட் செய்து அவர்கள் குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவு அளிப்பது போல் பேக் விடியோக்கள் பகிரப்பட்டு வருகிறது.