சமந்தா மாமியார் செய்யாத வேலையா? சைதன்யாவுக்கு இந்தப் பிரச்சனை இருக்கு- நடிகை சொன்ன ஷாக் தகவல்
நடிகை சமந்தாவும் நாக சைதன்யாவும் பிரிந்ததற்கு முக்கிய காரணமாக இருந்ததது குறித்து நடிகை சர்மிளா சில முக்கி. தகவல்களை அளித்துள்ளார்.

நடிகை சமந்தாவும் நாக சைதன்யாவும் விவாகரத்து பெற்று சில வருடங்கள் ஆகியிருந்தாலும் அவர்கள் திருமணம் குறித்த வதந்திகளும் தகவல்களும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமாகவே உள்ளது. அப்படி இருக்கையில் தென்னிந்திய மொழி படங்களில் நடித்து வந்த நடிகை சர்மிளா சமந்தா விவாகத்து குறித்து பேசியுள்ளார். அதில், சமந்தாவின் முடிவுக்கு ஆதரவாக பேசிய அவர், அவரது மாமியாரான நடிகை அமலா குறித்தும், கணவர் நாக சைதன்யா குறித்தும் திடுக்கிடும் தகவல்களை அளித்துள்ளார்.
தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டி ஒன்றில், இங்குள்ள பெரும்பால மக்கள் சமந்தா கிளாமர் உடை அணிந்து, குத்துப் பாடல் ஒன்றிற்கு நடனமாடியதன் காரணமாகவே தம்பதிக்குள் பிரச்சனை ஏற்பட்டு விவாகரத்து நடந்துள்ளது எனக் கூறுகின்றனர். எனக்கு என்ன சந்தேகம் என்றால் சமந்தா திருமணத்திற்கு முன்பும் சினிமாவில் இருந்து வந்துள்ளார். அப்போதும் அவர் கிளாமர் உடைகளை அணிந்துள்ளார். அதுமட்டுமின்றி, சமந்தா திருமணம் செய்து சென்ற குடும்பத்தினர் அனைவரும் சினிமா துறையில் உள்ளவர்களே. அவரது மாமியார் அமலாவும் சினிமாவில் இருந்தவர் தான். அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயத்தை பெரிதாக்கி அதனை குற்றம் சொல்வது ஏற்புடையது அல்ல.
உண்மையில், திருமணத்திற்கு பின்னும் சமந்தாவிற்கு பட வாய்ப்புகள் வந்துகொண்டு தான் இருந்தது. அவர், இருக்க இருக்க சினிமாவின் உச்சத்தை அடையத் தொடங்கினார். நாக சைதன்யாவைக் காட்டிலும் சமந்தாவின் புகழ் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. இதனால், சைதன்யாவிற்கு ஈகோ பிரச்சனை ஏற்பட்டு விட்டது. இதை கட்டுப்படுத்த முடியாததால் தான் சமந்தாவை விவாகரத்து செய்து உறவை முறித்துக் கொண்டார் எனக் கூறியிருந்தார். இந்த வீடியோ தற்போது பலரால் பகிரப்பட்டு வருகிறது.