என்னை அழகா இருக்கீங்கன்னு யாரும் சொன்னதே இல்லை.. பிரேமம் ரிலீஸின்போது பயந்திருக்கேன்.. ஓபனாக பேசிய நடிகை சாய் பல்லவி!
என்னை அழகா இருக்கீங்கன்னு யாரும் சொன்னதே இல்லை என்றும்; பிரேமம் ரிலீஸின்போது பயந்திருக்கேன் என்றும் ஓபனாக பேசிய நடிகை சாய் பல்லவியின் பேட்டி குறித்து பார்ப்போம்.

என்னை அழகா இருக்கீங்கன்னு யாரும் சொன்னதே இல்லை.. பிரேமம் ரிலீஸின்போது பயந்திருக்கேன்.. ஓபனாக பேசிய நடிகை சாய் பல்லவி!
தன்னை அழகாக இருக்கீங்கன்னு யாரும் சொன்னதே இல்லை என்றும்; பிரேமம் ரிலீஸின்போது பயந்திருக்கேன் என்றும் ஓபனாக பேசிய நடிகை சாய் பல்லவி பேட்டியளித்துள்ளார்.
இதுதொடர்பாக சமீபத்தில் பிஹைண்ட்வுட்ஸ் யூட்யூப் சேனலுக்கு நடிகை சாய் பல்லவி அளித்த பேட்டியின் தொகுப்பு இது:
அமரன் படத்தில் நடித்த கேரக்டர் ரொம்ப பிடிச்சிருந்ததா?
பதில்: சில நேரம் நம்ம யோசிப்போம்ல வீராங்கனை மாதிரி பண்ணனும்னு. அப்போது கார்கி மாதிரி ஸ்கிரிப்ட்கள் தான் நிறைய வந்தது. எனவே, ஸ்ட்ராங்கான ஒரு பெண் பற்றியான கதைகள் கிடைத்தால் பண்ணலாம்ன்னு நினைத்தேன். அப்போது தான் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி சார் இந்தக் கதையைக் கொண்டுவந்தாங்க.