Priyanka Mohan: பூ மழை பொழிந்து கொண்டிருக்க திடீரென சரிந்து விழுந்த மேடை..விபத்தில் சிக்கிய பிரியங்கா மோகன் - விடியோ
Priyanka Mohan: ஷாப்பிங் மால் திறப்பு விழா நிகழ்ச்சியில் ரசிகர்கள் பூ மழை பொழிந்து கொண்டிருக்க திடீரென சரிந்து விழுந்த மேடையில் நின்று கொண்டிருந்த நடிகை பிரியங்கா மோகன் விபத்தில் சிக்கியுள்ளார். லேசான காயங்களுடன் நான் நலமாக உள்ளேன் என அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Priyanaka Mohan: பூ மழை பொழிந்து கொண்டிருக்க திடீரென சரிந்து விழுந்த மேடை..விபத்தில் சிக்கிய பிரியங்கா மோகன்
தெலங்கானா மாநிலம் வாரங்கல் அருகே தொரூரில் உள்ள ஷாப்பிங் மால் திறப்பு விழாவில் பங்கேற்றுள்ளார் நடிகை பிரியங்கா மோகன். இந்த நிகழ்வின்போது மேடை சரிந்து விபத்துக்குள்ளானது. இதில் பிரியங்கா மோகன் அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் தப்பியுள்ளார்.
நான் நலமாக உள்ளேன்
இதுதொடர்பாக நடிகை பிரியங்கா மோகன் தனது எக்ஸ் பக்கத்தில், "தொரூரில் இன்று நான் கலந்து கொண்ட நிகழ்வில் நடந்த சிறிய விபத்தில் சிக்கினேன். சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளேன் என்பதை எனது நலம் விரும்பிகளுக்கு தெரிவிக்க விரும்புகிறேன். தற்போது நான் நலமாக உள்ளேன்.
சம்பவத்தில் காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய எனது பிரார்த்தனைகளும், வாழ்த்துக்களும்.