தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Vijaysethupathi:வெற்றி சார் பொண்ணா இருந்தா உஷார் பண்ணிருப்பேன்’- விஜய்சேதுபதி!

VijaySethupathi:வெற்றி சார் பொண்ணா இருந்தா உஷார் பண்ணிருப்பேன்’- விஜய்சேதுபதி!

Kalyani Pandiyan S HT Tamil
Apr 06, 2023 03:31 PM IST

படப்பிடிப்பு தொடக்கத்தின் போது வெற்றிமாறன் சார் என்னிடம், நான் ஒரு நல்ல டைரக்டரா என்பது தெரியாது. ஆனால் நான் ஒரு நல்ல டெய்லர் (எடிட்டர்) அதனால் ஒழுங்காக தைத்துக் கொடுத்து விடுவேன் நீங்கள் கவலைப்பட வேண்டாம் என்றார்

விஜய்சேதுபதி பேச்சு
விஜய்சேதுபதி பேச்சு

ட்ரெண்டிங் செய்திகள்

கதையின் நாயகனாக சூரி நடித்து இருக்கிறார். வாத்தியாராக விஜய்சேதுபதி நடித்து இருக்கிறார்.இவர்களுடன் கௌதம் மேனன், ராஜீவ்மேனன், சேத்தன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர். 30 -03-2024 அன்று வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதே நேரம் சிலர் விடுதலை படம் குறித்தான தங்களது விமர்சனங்களையும் பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்றைய தினம் சென்னையில் இந்த படத்திற்கான நன்றி தெரிவிக்கும் விழா நடந்தது.

இதில் கலந்து கொண்ட விஜய்சேதுபதி, “இந்த படம் ரிலீஸ் அன்று காலை ஒரு ஏழரை மணிக்கு வெற்றிமாறன் கால் செய்தார். எல்லா டார்ச்சரையும் பொறுத்துக் கொண்டு நடித்ததற்கு நன்றி. படத்தினுடைய ரிசல்ட் அமெரிக்காவில் இருந்து வந்து கொண்டிருக்கிறது எல்லோருக்கும் படம் பிடித்து இருக்கிறது என்று சொன்னார். 

நான் கடைசியாக எப்போது அந்த மாதிரியான காலை ரிசீவ் செய்தேன் இன்று எனக்கே சந்தேகமாக இருக்கிறது. இந்த படத்தினுடைய எந்த ஃப்ரேமை பார்த்தாலும் அல்லது மேக்கிங் வீடியோவை பார்த்தாலும் அங்கு பிரதானமாக இருப்பது வெற்றிமாறன் சார் தான். இது ஏதோ அவருக்கு பட்டர் தடவுவதற்காக சொல்லவில்லை. அவரின் பெரு வெடிப்புதான் இந்த திரைப்படம்.

இந்த படத்தினுடைய படப்பிடிப்பு தொடக்கத்தின் போது வெற்றிமாறன் சார் என்னிடம் நான் ஒரு நல்ல டைரக்டரா என்பது தெரியாது. ஆனால் நான் ஒரு நல்ல டெய்லர் (எடிட்டர்) அதனால் ஒழுங்காக தைத்துக் கொடுத்து விடுவேன் நீங்கள் கவலைப்பட வேண்டாம் என்றார். 

யானைகள் பணிவாக இருப்பது அழகாக இருக்கும்; அது போலத்தான் நான் வெற்றிமாறன் சாரை பார்க்கிறேன் அவரிடம் ஒரு தேவை இல்லாத ஒன்று குணம் கூட இல்லை அவர் எனக்கு மிகவும் பிரமாண்டமாக இருந்தார். நல்ல வேளை நான் பெண்ணாக இல்லை, இருந்திருந்தால் அவரை நான் உஷார் செய்திருப்பேன். நான் சரக்கு அடித்துக் கொண்டு போதையில் பேசினாலும் அவரிடம் மரியாதையாக தான் பேசுவேன்” என்றார். 

IPL_Entry_Point

டாபிக்ஸ்