தனிமை.. புதுவித நோயுடன் அல்லாடும் நடிகை.. என்னப் பற்றிய கவலை யாருக்கும் இல்லை- சமந்தா குமுறல்
சிட்டாடல் தொடரில் நடித்தபோது நான் மூளை அதிர்ச்சி எனப்படும் குறுகிய கால மறதியால் அவதிப்பட்டேன். என்னை யாரும் அங்கு மருத்துவமனைக்கு கூட அழைத்து செல்லவில்லை என நடிகை சமந்தா கூறியுள்ளார்.

தனிமை.. புதுவித நோயுடன் அல்லாடும் நடிகை.. என்னப் பற்றிய கவலை யாருக்கும் இல்லை- சமந்தா குமுறல்
நடிகை சமந்தா, வருண் தவான் நடிப்பில் உருவாகியுள்ளது சிட்டாடல் ஹனி பன்னி எனும் தொடர். பிரபலமான தி ஃபேமிலி மேன், பார்ஸி வெப் தொடர்களை எடுத்த ராஜ் மற்றும் டிகே இந்த தொடரை இயக்கியுள்ளனர்.
சில நாட்களுக்கு முன் இத்தொடரின் ட்ரெயிலர் வெளியானது. இந்நிலையில், சிட்டாடல் ஹனி பென்னி தொடர் குறித்து இந்தக் குழு கலாட்டா இந்தியா யூடியூப் சேனலில் கலந்துரையாடினர்.
அப்போது நடிகை சமந்தா படப்பிடிப்பு சமயத்தில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களையும், வலிகளையும் நினைவு கூர்ந்தார்.