இதை உங்க தோழி சமந்தாகிட்ட சொல்லுங்க.. விடாமல் எழுதிய நெட்டிசன்.. வேதனையை வெளிப்படுத்திய சின்மயி
இதை உங்க தோழி சமந்தாகிட்ட சொல்லுங்க.. விடாமல் எழுதிய நெட்டிசன்.. வேதனையை வெளிப்படுத்திய சின்மயி

தமிழ்நாட்டின் கோவை வெள்ளியங்கிரி அருகே இருக்கும் ஜக்கி வாசுதேவின் ஈஷாவில் சட்டவிரோதமாக சிலரை அடைத்து வைத்ததாக குற்றச்சாட்டுகள் மற்றும் சர்ச்சை நிலவி வருகிறது.
இந்நிலையில், பாடகி சின்மயியிடம் ஒரு ரசிகர், சமந்தாவிடம் இனி ஈஷா நிறுவனத்துடன் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டாம் என்று கூறுமாறு கேட்டுக்கொண்டார். அதற்கு பாடகி சின்மயி அளித்த பதில் சமூக வலைதளங்களில் பேசுபொருள் ஆகியிருக்கிறது.
ஈஷா அறக்கட்டளை மீதான குற்றச்சாட்டுகள் குறித்து சின்மயி எக்ஸ் (முன்பு ட்விட்டர்) தளத்தில் பல செய்திகளை பகிர்ந்து வருகிறார். சமந்தாவிடம், ஈஷாவுடனான இணைப்பில் இருந்து விலகி இருக்குமாறு ரசிகர் ஒருவர் கமெண்ட் செய்தபோது, அதற்கு பதிலளித்த சின்மயி, "நான் விரும்பும் நபர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று தான் அறிவுரை சொல்வதில்லை’’ எனக் கூறியிருக்கிறார்.