இதை உங்க தோழி சமந்தாகிட்ட சொல்லுங்க.. விடாமல் எழுதிய நெட்டிசன்.. வேதனையை வெளிப்படுத்திய சின்மயி
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  இதை உங்க தோழி சமந்தாகிட்ட சொல்லுங்க.. விடாமல் எழுதிய நெட்டிசன்.. வேதனையை வெளிப்படுத்திய சின்மயி

இதை உங்க தோழி சமந்தாகிட்ட சொல்லுங்க.. விடாமல் எழுதிய நெட்டிசன்.. வேதனையை வெளிப்படுத்திய சின்மயி

Marimuthu M HT Tamil Published Oct 20, 2024 09:28 AM IST
Marimuthu M HT Tamil
Published Oct 20, 2024 09:28 AM IST

இதை உங்க தோழி சமந்தாகிட்ட சொல்லுங்க.. விடாமல் எழுதிய நெட்டிசன்.. வேதனையை வெளிப்படுத்திய சின்மயி

இதை உங்க தோழி சமந்தாகிட்ட சொல்லுங்க.. விடாமல் எழுதிய நெட்டிசன்.. வேதனையை வெளிப்படுத்திய சின்மயி
இதை உங்க தோழி சமந்தாகிட்ட சொல்லுங்க.. விடாமல் எழுதிய நெட்டிசன்.. வேதனையை வெளிப்படுத்திய சின்மயி

இந்நிலையில், பாடகி சின்மயியிடம் ஒரு ரசிகர், சமந்தாவிடம் இனி ஈஷா நிறுவனத்துடன் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டாம் என்று கூறுமாறு கேட்டுக்கொண்டார். அதற்கு பாடகி சின்மயி அளித்த பதில் சமூக வலைதளங்களில் பேசுபொருள் ஆகியிருக்கிறது. 

ஈஷா அறக்கட்டளை மீதான குற்றச்சாட்டுகள் குறித்து சின்மயி எக்ஸ் (முன்பு ட்விட்டர்) தளத்தில் பல செய்திகளை பகிர்ந்து வருகிறார். சமந்தாவிடம், ஈஷாவுடனான இணைப்பில் இருந்து விலகி இருக்குமாறு ரசிகர் ஒருவர் கமெண்ட் செய்தபோது, அதற்கு பதிலளித்த சின்மயி, "நான் விரும்பும் நபர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று தான் அறிவுரை சொல்வதில்லை’’ எனக் கூறியிருக்கிறார். 

’சமந்தாவிடம் இதைக் கேளுங்க’ - சின்மயி

இதுதொடர்பாக ரசிகர் ஒருவர் கேட்ட கேள்வியில், ‘’சமந்தா உங்கள் தோழி என்பதால், ஈஷாவில் என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள நீங்கள் அவளுக்கு உதவலாம். நம் அன்புக்குரியவர்கள் தவறான நட்பில் இருப்பதாகச் சொல்வதை விட சிறந்தது எது?’’எனக் கேள்வி எழுப்பி இருந்தார்.

சமந்தா மற்றும் நாக சைதன்யா விவாகரத்து செய்த பிறகு, சின்மயி அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிட்டதாக ட்ரோல்கள் வந்து குற்றம்சாட்டின.

அதற்குப் பதில் அளித்திருந்த சின்மயி, ‘’ நான் விரும்பும் நபர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று நான் சொல்வதில்லை. தெலுங்கு பிரதேசத்திலும் மற்றும் தெலுங்கு சமூக ஊடகங்களிலும் நான் சிலரை விவாகரத்து செய்ய உந்துவதலாக இருப்பதாகச் சிலர் கூறுகின்றனர்.

விஷயம் என்னவென்றால் - தெலுங்கு சமூக ஊடகங்களும், மனக்குழப்பம் கொண்ட வெறி பிடித்தவர்களும் தங்கள் விவாகரத்துக்கு நான் மட்டுமே காரணம் என்று சொன்னது உங்களுக்குத் தெரியாது. யூடியூபர்கள் மற்றும் சிலர் வீடியோவுக்குப் பிந்தைய கதையைக் கட்டுகின்றனர்.

உங்களுக்கு எதுவும் தெரியாது என்பதை நான் புரிந்துகொள்கிறேன். ஆனால், அதை கூகுள் செய்து பாருங்கள். 'அந்தப் பெண்ணின் வாழ்க்கையை அழித்ததற்காக' தன்னை கீழ்த்தரமாக பேசுகின்றனர்’’ என வருத்தப்பட்டு சின்மயி பேசியுள்ளார். 

என்ன நடந்தது?

நவராத்திரி மற்றும் சிவராத்திரியின்போது ஈஷா அமைவிடத்துக்குச் சென்று கொண்டாட்டங்களில் பங்கேற்பது திரைநட்சத்திரங்கள் வழக்கம். ஆன்மிகம் குறித்த ஜக்கியின் போதனைகளைப் பின்பற்றுவதிலும் அவர் பகிரங்கமாக இருக்கிறார். சமீபத்தில், கோவை ஈஷா அமைவிடத்துக்குச் சென்ற நடிகை சமந்தா லிங்கபைரவியின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு எழுதியதாவது, "உங்கள் வார்த்தையை நான் ஏற்றுக்கொண்டேன். நன்றி, தேவி! அனைவருக்கும் நவராத்திரி வாழ்த்துக்கள்’’எனத் தெரிவித்து இருந்தார்.

ஓய்வுபெற்ற பேராசிரியரான டாக்டர் எஸ்.காமராஜ், தனது இரண்டு மகள்களான கீதா (42) மற்றும் லதா (39) ஆகியோர் ஈஷா அறக்கட்டளையில் சிறை வைக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார். இந்த மனுவை உச்ச நீதிமன்றம் கடந்த 2024ஆம் ஆண்டு, அக்டோபர் 18ஆம் தேதி தள்ளுபடி செய்தது. இந்திய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் இரண்டு பெண்களும் மேஜர்கள் என்றும், ஈஷாவில் அடைக்கப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லாமல் சுதந்திரமாக அங்கு வசித்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

ஈஷா அறக்கட்டளை தொடர்பாக கடந்த 15 ஆண்டுகளில் 6 பேர் காணாமல் போனோர் என வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் ஐந்து வழக்குகள் போதிய சாட்சிகள் இன்றி முடிக்கப்பட்டன. அதே நேரத்தில் ஒரு நபர் இன்னும் கண்டுபிடிக்கப்படாததால் அந்த வழக்கு மட்டும் விசாரணையில் உள்ளது. மேலும் ஈஷா அறக்கட்டளையில் போக்சோ வழக்கு உட்பட பாலியல் வன்கொடுமை மற்றும் நில ஆக்கிரமிப்பு குற்றச்சாட்டுகளும் உள்ளன.