சபரிமலையில் பாடலாம்..பூசை நன்றாக நடக்கும் "I Am Sorry Iyyappa..அறிவு புகட்டி அனுப்பப்பா" - நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் நக்கல்
இதைப்போன்ற கருத்தாழமுள்ள பாடல்களை சபரிமலை அருகிலேயே மேடையிட்டு பாடினால் பூசை சிறப்பாக நடக்கும். எல்லா மொழி பக்தர்களும் கேட்டு 'பரிசளிப்பார்கள்' அல்லவா? என்று ஐ யம் சாரி ஐயப்பா பாடல் குறித்து நடிகர் எம்.எஸ். பாஸ்கர் விமர்சித்துள்ளார்.

தென்தமிழகத்தில் ஐயப்பன் சீசன் களைகட்ட தொடங்கியிருக்கும் நிலையில், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் விரதம் இருந்து வருகிறார்கள். இதையடுத்து இருமுடி கட்டி கேரளா மாநிலம் சபரிமலையில் இருக்கும் ஐயப்பன் கோயிலில் சாமி தரிசனமும் செய்கிறார்கள்.
இந்த நேரத்தில் கடந்த 2018இல் பிக் பாஸ் பிரபலமும், கானா பாடகியுமான இசைவாணி பாடிய ஐ ஏம் ஸாரி ஐயப்பா என்ற பாடல் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதைத்தொடர்ந்து இந்த பாடலுக்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், பாடலை பாடிய இசைவாணியை கைது செய்ய கோரி போலீசில் புகாரும் அளிக்கப்பட்டது.
இந்த பாடலுக்கு திரைபிரபலங்கள் பலரும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவின் மூத்த குணச்சத்திர நடிகரான எம்.எஸ். பாஸ்கர், இசைவாணி பாடிய பாடலை விமர்சித்துள்ளார்.
