தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ‘யார் கூப்பிட்டாலும் நடிக்கப் போனது தவறு தான்’ -பாபி சின்ஹா உருக்கம்!

‘யார் கூப்பிட்டாலும் நடிக்கப் போனது தவறு தான்’ -பாபி சின்ஹா உருக்கம்!

Stalin Navaneethakrishnan HT Tamil
Feb 07, 2023 11:35 AM IST

Bobby Simha: ‘ஒரு வினியோகஸ்தர் என்னிடம் கேட்டார், ‘ஒரு படத்தில் இப்படி பண்றீங்க, இன்னொரு படத்தில் அப்படி பண்றீங்க? எப்படி உங்க மார்க்கெட் மதிப்பை நாங்கள் முடிவு பண்ண முடியும்?’ என்று’ -பாபி

பாபி சின்ஹா
பாபி சின்ஹா

ட்ரெண்டிங் செய்திகள்

‘‘நான் ஒரு ஐந்தாறு வருடமாக ஊடகவியலாளர்களை சந்திக்கவில்லை. செய்தியாளர்களை அழைத்து இந்த நிகழ்ச்சியை அவர்கள் கையால் நடத்தலாம் என முடிவு செய்தோம். நிறைய நல்ல வாய்ப்புகள் கிடைத்தும், பெரிய இடத்திற்கு வர முடியாமல் போனதற்கு நான் தான் காரணம். 

100 சதவீதம் என் வளர்ச்சிக்கு பாதிக்கப்பட்டதற்கு நான் தான் காரணம் என நினைக்கிறேன். என்னோட  வெற்றிக்கும், தோல்விக்கும் நான் காரணமாக இருப்பேன் என நம்புகிறேன். நான் நினைக்கிறேன், எதையோ நான் தவறவிட்டுவிட்டேன். 

அது தோற்றத்திலா? கதையிலா? என்று தெரியவில்லை. எனக்கு முடியாது என்று சொல்லத் தெரியாமல் போய்விட்டது. யார் வந்து கேட்டாலும் , நான் நடிக்க ஒப்புக்கொண்டேன். அப்படி இருந்தது, அந்த படங்கள் ரிலீஸ் ஆகும் போது எனக்கு அதன் விளைவு புரிந்தது. 

ஒரு வினியோகஸ்தர் என்னிடம் கேட்டார், ‘ஒரு படத்தில் இப்படி பண்றீங்க, இன்னொரு படத்தில் அப்படி பண்றீங்க? எப்படி உங்க மார்க்கெட் மதிப்பை நாங்கள் முடிவு பண்ண முடியும்?’ என்று கேட்டார். அப்போ தான் எனக்கு அதுவே புரிந்தது. 

பிடித்து ஒரு வேலையை பண்றோம், ஆனால் வணிகரீதியா வரும் போது அதற்கு ஏற்ப சில முடிவுகள் எடுக்கணும். வெற்றி பெற வேண்டுமென்றால் உறுதியா சில முடிவுகள் எடுக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். அப்புறம் கொஞ்சம் கத்துக்கிட்டேன். அப்படி பார்க்கும் போது, என் நிலைக்கு நான் தான் காரணம்,’’

என்று பாபி சின்ஹா பேசியுள்ளார். 

IPL_Entry_Point

டாபிக்ஸ்