ரவீந்தரை விளாசும் தீபக்.. இனி நம்ம என்ன பண்ணாலும் அது வேஸ்ட்.. ஒரு வார்த்தை கூட பேசாமல் மௌனம் காத்த ரவீந்தர்!
Bigg Boss Tamil 8 : சார் நீங்க பண்ணது தப்பே கிடையாது. ஸ்மார்ட் ஃபளே. ஆனா நீங்க அத ரிவீல் பண்ணி இருக்க கூடாது. உங்களுக்கு என்ன பயம் வந்துடுச்சுனா இதுல எது போடுவாங்க, போடமாட்டாங்க என்ற பயம் வந்துடுச்சு என தீபக் ரவீந்தரை கேள்வி எழுப்பும் வீடியோ வைரல் ஆகி வருகிறது.

விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு 3 நாட்கள் மட்டுமே ஆன நிலையில், அதிகளவு சண்டை நடந்துள்ளது. பெண்கள் அவர்கள் அணிக்குள்ளும், ஆண்கள் அணியும் பெண்கள் அணியும் சண்டையிட்ட நிலையில், இன்று மிகவும் அமைதியாகவும் ஒற்றுமையுடனும் இருந்த ஆண்கள் அணி நேற்று 2ஆக பிளவுபட்டுள்ளது. நேற்று ரஞ்சித், தயாரிப்பாளர் ரவீந்தர் உடன் சேர்ந்துக் கொண்டு சண்டை போடுவது போல போட்ட பிராங்க் ஜாக்குலின் உள்ளிட்ட பெண் போட்டியாளர்களை கடுப்பின் உச்சத்துக்கே கொண்டு சென்றுள்ளது.
ரஞ்சித் ரவீந்தரை அடிக்கப் பாய்கிறார்
நேற்று அந்த பிராங்கில், நடிகர் ரஞ்சித் ரவீந்தரை அடிக்கப் பாய்ந்து செல்வதும் அவரை சக போட்டியாளர்கள் தடுப்பதும் நடந்துள்ளது. அதுமட்டுமின்றி, இருவரும் போட்டியின்போது ஒருவருக்கு ஒருவர் ஒருமையிலும் பேசி உள்ளனர். முதலில், கோவமாக உள்ள ரஞ்சித் ஏன் தேவையில்லாத வேலையை பண்றீங்க என ரவீந்தரிடம் ஆவேசமாக கேட்கிறார். அப்போது, பவித்ரா நீங்க கலாய்குற மூட்ல இருக்கிங்களா என ரஞ்சித்திடம் கேள்வி எழுப்புகிறார். இதற்குள் பதிலளித்த ரவீந்தர், யார் தேவையில்லாம பேசுறா, நீ ஏன் அந்தப் பொன்ன மிரட்டுறீங்க என கேள்வி எழுப்புகிறார். அப்போது கையை இறக்கி பேசுங்க என மீண்டும் கோவப்பட்ட ரஞ்சித் ரவீந்தரை அடிக்கப் பாய்கிறார்.
ஜாக்குலின் சமாதானம்
நீங்க ஒன்னும் பாஸ் கிடையாது. கேள்வி கேட்க. பிக்பாஸ் மட்டும் தான் பாஸ் என கோவமாக பேசுகிறார். இதற்கிடையில், ரஞ்சித்தை தடுக்க வந்த அருண் கீழே விழுகிறார்.தன்னை தடுக்க ஒரு கும்பல் இருக்கும் போது, அவர்களையும் சேர்த்தே முன் இழுத்து சென்று கோவத்தை காட்டியுள்ளார் ரஞ்சித். மேலும், கையை நீட்டிப் பேச நான் ஒன்னும் உங்க வீட்டு வேலைக்காரன் கிடையாது எனவும் கூறியுள்ளார். பின், ரவீந்தர் ஆவேசமாக எழுந்து நிற்க முயற்சி செய்து ஏய் நீ என்ன பண்ணிறுவ என அதட்டுகிறார். அவரை ஜாக்குலின் சமாதானம் செய்கிறார்.