ரூல்ஸை மீறிய ஜாக்குலின்.. நடு ராத்திரியில் சம்பவம் செய்த பாய்ஸ் டீம்.. என்ன செய்தார் ஜாக்குலின்?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ரூல்ஸை மீறிய ஜாக்குலின்.. நடு ராத்திரியில் சம்பவம் செய்த பாய்ஸ் டீம்.. என்ன செய்தார் ஜாக்குலின்?

ரூல்ஸை மீறிய ஜாக்குலின்.. நடு ராத்திரியில் சம்பவம் செய்த பாய்ஸ் டீம்.. என்ன செய்தார் ஜாக்குலின்?

Malavica Natarajan HT Tamil
Published Oct 09, 2024 08:52 AM IST

ஜாக்குலின் நடு இரவில் ஆண்கள் அணியின் பக்கம் சென்றதால் அவர் வீட்டின் விதிமுறைகளை மீறிவிட்டார் என்று அவருக்கு அப்போதே தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.

ரூல்ஸை மீறிய ஜாக்குலின்.. நடு ராத்திரியில் சம்பவம் செய்த பாய்ஸ் டீம்.. என்ன செய்தார் ஜாக்குலின்?
ரூல்ஸை மீறிய ஜாக்குலின்.. நடு ராத்திரியில் சம்பவம் செய்த பாய்ஸ் டீம்.. என்ன செய்தார் ஜாக்குலின்?

இதையடுத்து, இரு அணிகளும் தங்கள் பக்கம் உள்ள இடத்திற்குள் வந்தால், என்னென்ன செய்ய வேண்டும் என்பதை தீர்மானித்து அதை பிக்பாஸிடம் அனுமதியும் வாங்கி வைத்திருந்தனர்.

ரூல்ஸை மீறிய ஜாக்குலின்

இந்நிலையில், நேற்று இரவு பிக்பாஸ் வீட்டில் பாதிபேர் தூங்கிய நிலையில், வீட்டின் நடுவே வந்து கொண்டிருந்த ஜாக்குலின், எதிர்பாராத விதமாக ஆண்கள் அணி பக்கம் சென்றுவிட்டார். பின் அவர் உடனே பெண்கள் அணிப் பக்கம் வந்துவிட்டார். இதனை கவனித்த ஜெஃப்ரி, ஜாக்குலினை சக போட்டியாளர்களிடம் மாட்டிவிட்டார்.

பின், அங்கிருந்து அருண், சத்யா, ஜெஃப்ரி போன்றோர் ஜாக்குலினுக்கு தண்டனை கொடுக்க நடு ஹாலில் அமர வைத்தனர். இதையடுத்து, அவர்கள் அனைவரும் ஒன்றாக ஆலோசித்து ஜாக்குலினுக்கு ஒரு தண்டனை வழங்கினர். அது என்னவென்றால், வித்தியாச வித்தியாசமாக சிரித்துக் காட்டுவது தான்.

சப்புன்னு போன தண்டனை

என்ன சொல்லப் போகிறார்களோ என பயத்துடன் காத்திருந்த ஜாக்குலினுக்கு அட இவ்வளவு தானா என்ற நினைப்பு வந்து, அவரும் வித்தியாசமாக சிரித்து காண்பித்து விட்டு கிளம்பினார்.

இதனால், வீட்டின் விதியை மீறுவோருக்கு மிகவும் கடினமான தண்டனை வழங்கப்படும் என நினைத்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

ஆரம்பித்த கிசுகிசு

அதுமட்டுமில்லாமல், பிக்பாஸ் வீட்டில் மிகவும் சிறப்பானதே கிசுகிசுக்கள் தான். அதுவும் நேற்று கோலாகலமாக தொடங்கியுள்ளது. பிக்பாஸ் ஆண்கள் அணியில் உள்ள விஜே விஷாலை ஜாக்குலினுக்கும், தர்ஷாவிற்கும் முன்னரே தெரியுமாம். ஆனால், அவர் பிக்பாஸ் வீட்டிற்கு வந்ததிலிருந்து தற்போது வரை அவர்களிடம் பேசவில்லையாம்.

சேப் கேம் விளையாடும் விஷால்

இவர்கள் இருவரையும் கண்டால் ஒதுங்கியே செல்கிறாராம். அதுமட்டுமல்லாமல், இப்போது வரை நான் வெளியில் படுத்து தூங்குகிறேன் அது ஏன் எனக் கூட அவர் கேட்கவில்லையாம்.

இதனால், விஜே விஷால் சேப் கேம் விளையாடி வருகிறார் என இருவரும் முனுமுனுத்தனர். இதையடுத்து, பிக்பாஸ் வீட்டில் அடுத்து யாரைப் பற்றி கிசுகிசு வரவுள்ளது என மக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

உப்பு பஞ்சாயத்து

பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களுக்கான சமையல் பொருட்கள் நேற்று வந்தது. இதையடுத்து, ஆண்கள் தங்களுக்கென தனியாகவும், பெண்கள் தங்களுக்கென தனியாகவும் சமைக்க வேண்டும் எனவும், அதற்காக சில விதிமுறைகளையும் பிக்பாஸ் கூறியிருந்தது. இதற்கிடையில், ஆண்கள் அணி சமையல் பொருட்களில் உப்பை எடுக்க தவறினர், பின் உப்பை கொடுத்தால் மட்டுமே சமையல் பொருட்களை எடுக்க உள்ளே விடுவோம் என கூறுமாறு பவித்ரா ஐடியா கொடுக்க அதை பின்பற்றி, ஆண்கள் அணியினர் உப்பு கேட்டனர். முதலில் மறுத்த பெண்கள் அணி சில கலவரத்திற்குப் பின் உப்பை ஆண்கள் அணியினரிடம் கொடுத்தனர்.

இதனால், மக்கள் எதிர்பார்த்ததை விட இந்த சீசனில் அமளி துமளி அதிகமாக இருக்கும் என நம்பப்படுகிறது.