29 Years Of Vishnu: 'தொட்டபெட்டா ரோட்டு மேல முட்டை பரோட்டா’ பாடல் பாடிய விஜயை தூக்கிவிட்ட விஷ்ணு திரைப்படம்!
29 Years Of Vishnu: 'தொட்டபெட்டா ரோட்டு மேல முட்டை பரோட்டா’ பாடல் பாடிய விஜயை தூக்கிவிட்ட விஷ்ணு திரைப்படம் குறித்து பார்ப்போம்.

29 Years Of Vishnu: ஷோபா சந்திரசேகர் கதையில், எஸ்.ஏ.சந்திரசேகர் திரைக்கதை அமைத்து இயக்கி, நடிகர் விஜய் நடித்து ஹிட்டடித்த திரைப்படம் தான், விஷ்ணு. இத்திரைப்படம்,1995ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17ஆம் தேதி, ரிலீஸாகி பட்டிதொட்டியெங்கும் ஹிட்டடித்தது. இப்படத்தில் நடிகர் விஜய்யுடன் சங்கவி, ஜெய்சங்கர், தலைவாசல் விஜய், செந்தில், குமரிமுத்து ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்திற்கான வசனங்களை கோபு பாபு எழுத, ஒளிப்பதிவை விஸ்வம் நட்ராஜ் செய்திருந்தார். மேலும், இசையை தேவாவும், எடிட்டிங்கினை எம்.வெள்ளைசாமியும் செய்திருந்தனர். இன்றுடன் விஷ்ணு திரைப்படம் வெளியாகி, 29ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது. இப்படம் குறித்துப் பேச நம்மிடம் ஏராளமான விஷயங்கள் உள்ளன. வாருங்கள் பார்க்கலாம்.
விஷ்ணு திரைப்படத்தின் கதை என்ன?
விஷ்ணுவின் தந்தை தங்கதுரைக்கும் விஷ்ணுவுக்கும் முரண்பாடுகளுடனே வாழ்க்கை போகிறது. விஷ்ணுவின் தந்தை தங்கதுரை, தன் மகனை பயந்தவராகவே வளர்க்க விரும்புகிறார். ஆனால், விஷ்ணு, உலகத்தை நன்கு சுற்றிப் பார்த்து பரந்துபட்ட ஆளாக வளர விரும்புகிறார். தங்கதுரை தன் மகன் விஷ்ணு மீது காட்டும் அளவுகடந்த பாதுகாப்பு, விஷ்ணுவை வெறுக்க வைக்கிறது. அதனால், யாரிடமும் சொல்லாமல் வீட்டை விட்டு வெளியேறும் விஷ்ணு, ஊட்டியில் உள்ள ஒரு எஸ்டேட்டில் பணிக்கு சேர்கிறார். எஸ்டேட் உரிமையாளர் ராஜமாணிக்கம், விஷ்ணுவின் நடத்தைகள் பிடித்துப்போய், விஷ்ணுவை தன் மகனாக தத்தெடுக்கிறார். இது ஒருபுறம் போய்க்கொண்டிருக்க, ராதா என்னும் பெண்ணைப் பார்த்தவுடன் விஷ்ணு காதலில் விழுகிறார். பின் இருவரும் காதலிக்கின்றனர்.
இதற்கிடையே விஷ்ணுவின் வளர்ப்புத்தந்தை ராஜமாணிக்கம், ஒரு புகைப்படத்தை விஷ்ணுவிடம் காட்டி, தன் மீது வைத்திருக்கும் அன்பு உண்மையென்றால், இப்புகைப்படத்தில் இருக்கும் நபரை கொல்லவேண்டும் என்கிறார். அவரைக் கொல்வதற்கு முக்கிய காரணமென்றால், தன் சொந்தமகனை இப்புகைப்படத்தில் இருப்பவர் கொன்றுவிட்டதாக ராஜமாணிக்கம் விஷ்ணுவிடம் கூற, விஷ்ணுவும் அதைச் செய்து அவரைப் பழிவாங்கிவிடுவோம் என்கிறார். இதற்கிடையே அந்தப் படத்தை வாங்கி பார்க்கும் விஷ்ணுவுக்கு அதிர்ச்சி காத்திருக்கிருக்கிறது. ஏனென்றால், அதில் இருப்பது விஷ்ணுவின் சொந்த தந்தையான தங்கதுரையின் புகைப்படம்.