தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  20 Years Of Ghilli : கில்லி படத்தின் ஹீரோ, ஹீரோயினாக முதலில் தேர்வானவர்கள் யார் தெரியுமா?

20 Years of Ghilli : கில்லி படத்தின் ஹீரோ, ஹீரோயினாக முதலில் தேர்வானவர்கள் யார் தெரியுமா?

Priyadarshini R HT Tamil
Apr 17, 2024 05:30 AM IST

20 Years of Ghilli : ‘செல்லம் ஐ லவ் யூ’ பிரகாஷ் ராஜ்; ‘கபடி கபடி’ விஜய்! அனல் பறந்த கில்லியை மறக்க முடியுமா?

20 Years of Ghilli : கில்லி படத்தின் ஹீரோ, ஹீரோயினாக முதலில் தேர்வானவர்கள் யார் தெரியுமா?
20 Years of Ghilli : கில்லி படத்தின் ஹீரோ, ஹீரோயினாக முதலில் தேர்வானவர்கள் யார் தெரியுமா?

ட்ரெண்டிங் செய்திகள்

வேலு, கட்டுப்பாடான போலீஸ்கார தந்தையின் வாழ்வை கொண்டாடும் மகன். அம்மா மற்றும் தங்கை என அழகான குடும்பம். தேர்வில் சரியாக தேர்ச்சி பெறவேண்டும் என்று வேலுவின் தந்தை வலியுறுத்திக்கொண்டே இருப்பார். ஆனால் வேலுவுக்கோ ஆர்வம் கபடியில்.

அதுபோன்றதொரு கபடி போட்டிக்காக மதுரை செல்வார். அங்குதான் கதை துவக்கம். அந்த ஊரின் அடாவடி ரவுடி முத்துப்பாண்டி. தனலட்சுமியை துரத்தி துரத்தி காதலிப்பார். அவரை சந்திக்கும்போதெல்லாம் அவர் பேசும் காதல் வசனம் ‘செல்லம் ஐ லவ் யூ’ இது மிகவும் பிரபலமான வசனமாக இன்றளவும் உள்ளது.

ஆனால் தனலட்சுமி கல்லூரி முடித்த சிறு பெண், முத்துப்பாண்டியோ அவரைவிட அதிக வயதானவர் மற்றும் ரவுடி என்பதால் தனலட்சுமிக்கு அவரை பிடிக்காது. இந்த திருமணத்தை தடுத்த அவரது இரு அண்ணன்களையும் முத்துப்பாண்டி கொன்றுவிடுவார். தனலட்சுமியின் பெற்றோர் அவரை அமெரிக்கா அனுப்ப திட்டமிடுவார்.

அதற்காக தப்பிச்செல்லும்போதுதான் முத்துப்பாண்டியிடம் தனலட்சுமி மாட்டிக்கொள்வார். இதில், அங்கு விளையாடச் சென்ற வேலு, தனலட்சுமியை காப்பாற்றி, தனது வீட்டுக்கு அழைத்து வந்து யாருக்கும் தெரியாமல் பதுக்கிவைத்திருப்பார்.

வேலுவின் தந்தைதான் தனலட்சுமியைத் தேடும் போலீஸ்காரர். வீட்டுக்குள்ளே அவர் இருப்பது அவருக்கு தெரியாது. இந்நிலையில் அவருக்கு அமெரிக்க விசா, விமான டிக்கெட் என அனைத்தும் தயார் செய்து தனலட்சுமியை அமெரிக்கா அனுப்புவதில் குறியாக இருப்பார் விஜய். இதற்கிடையில் இருவருக்குள்ளும் காதல் மலரும். கபடியின் இறுதி போட்டியும் வந்துவிடும்.

இந்நிலையில், வேலுவின் தந்தை தனலட்சுமியை கண்டுபிடிப்பாரா? தனலட்சுமி அமெரிக்கா செல்வாரா? வேலு கபடி போட்டியில் வெல்வாரா? முத்துப்பாண்டி, தனலட்சுமியை கரம் பிடிப்பாரா? என்பதுதான் படத்தின் பரபரப்பான கிளைமேக்ஸ். படம் துவங்கியது முதல் இறுதி வரையே பரபரபப்பு, விறுவிறுப்புதான்.

தாமு, மயில்சாமி, நாகேந்திர பிரசாத் என விஜயின் நண்பர்களுடனான காமெடி, விஜயின் வீட்டில் அவரது தங்கையான ஜெனிஃபருடனான காமெடி என படம் காமெடியிலும் அதகளப்படுத்தியிருக்கும். விஜயின் தாய், தந்தை கதாபாத்திரங்களில் ஜானகி சபேசும், ஆஷிஷ் வித்யார்த்தியும் கலக்கியிருப்பார்கள்.

வித்யாசாகரின் இசையில் அத்தனை பாடல்களும் ஹிட். கபடி கபடி, அர்ஜீனரு வில்லு, ஷாலாலா, அப்படிப்போடு போடு, சூரத்தேங்காய், கொக்கரக்கொக்கரக்கோ, காதலா காதலா ஆகிய பாடல் அனைத்தும் இன்றளவும் விரும்பி கேட்கப்படும் பாடல்களாக உள்ளது.

இந்தப்படத்தில் முதலில் விக்ரம்தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் அவர் வேறு வேலைகளில் இருந்ததால் அவரால் நடிக்க முடியவில்லை. பின்னரே இயக்குனர் தரணி விஜயை தேர்ந்தெடுத்தார். அதேபோல் தனலட்சுமியாக த்ரிஷா தேர்வு செய்யப்பட்டிருந்தார். ஆனால் அதில் த்ரிஷா நடித்தார். வில்லனான பிரகாஷ்ராஜ் அசத்தலாக நடித்திருப்பார். இந்தப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் ஆனதை ஹெச்.டி. தமிழ் நினைவு கூறுகிறது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்