Nainar Nagendran: ’தாம்பரதில் 4 கோடி ரூபாய் பிடிபட்ட விவகாரம்! நயினார் நாகேந்திரன் விசாரிக்க அமலாக்கத் துறை மறுப்பு!’
”இந்த விவகாரம் தொடர்பாக இருவர் மீதும் சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமலாக்கத்துறை சார்பில் மனு அளித்ததாக கூறி உள்ளார்”

நயினார் நாகேந்திரன்
நயினார் நாகேந்திரன் தொடர்பு உடையவர்களிடம் இருந்து 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கை விசாரிக்க அமலாக்கத்துறை மறுப்பு தெரிவித்து உள்ளது.
திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் ராகவன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் சார்பில் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக கொண்டு செல்லப்பட்ட 4 கோடி ரூபாய் பணம் தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
இதே போல் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸ் சார்பில் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்வதற்காக திருநெல்வேலி திமுக மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் இருந்து 28 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக கூறி உள்ளார்.