DMK VS ADMK: ’நான் தான் முதலில் வந்தேன் போடா!’ வடசென்னையில் மோதிக் கொண்ட திமுக-அதிமுக! டென்ஷன் ஆன சேகர்பாபு!
”இதில் அமைச்சர் சேகர்பாபு மற்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கும், அதிமுக மாவட்ட செயலாளர் ராஜேஷ் மற்றும் சேகர்பாபு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இருவரும் ஒருமையில் ’வாடா போட்டா’ என்று பேசிக்கொள்ளும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது”

திமுக - அதிமுக இடையே வாக்குவாதம்!
நாடாளுமன்றத் தேர்தல் 2024
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் மார்ச் 20ஆம் தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 27 ஆகும். மார்ச் 28ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும் நிலையில், வேட்புமனுக்களை திரும்பப் பெற மார்ச் 30ஆம் தேதி கடைசி நாள் ஆகும். பதிவு செய்யப்பட்ட வாக்குகள் வரும் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.
வடசென்னையில்
திமுக சார்பில் கலாநிதி வீராசாமி, அதிமுக சார்பில் ராயபுரம் மனோ, பாஜக சார்பில் பால் கனகராஜ் உள்ளிட்டோர் வேட்பாளராக போட்டியிடுகின்றனர்.