Loksabha Election: காங்கிரஸை தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சிக்கும் ஆப்பு! 11 கோடி கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்!
”இந்த விவகாரத்தில் நாங்கள் சட்ட உதவியை நாடுகிறோம், எங்கள் வழக்கறிஞர்களுடன் கலந்து ஆலோசிக்கிறோம் என்று சிபிஐ மூத்த தலைவர் ஒருவர் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திடம் கூறி உள்ளார்”

நாடாளுமன்றத் தேர்தல் 2024
இந்தியாவில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் மார்ச் 20ஆம் தேதி தொடங்கி மார்ச் 27 ஆம் தேதி முடிவடைந்தது. மார்ச் 28ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது.
வேட்புமனுக்களை திரும்பப் பெற மார்ச் 30ஆம் தேதி கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. இதனை தொடர்ந்து தமிழ்நாட்டில் தேர்தல் பரப்புரை பணிகள் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.