WPL 2024 Final: நெருப்புடா..! 16 ஆண்டு கால கனவு - ஐபிஎல் கோப்பையை முத்தமிட்ட ஸ்மிருதி மந்தனாவின் ஆர்சிபி மகளிர் அணி
ஆர்சிபி அணியின் நீண்ட நாள் கோப்பை கனவை மகளிர் ப்ரீமியர் லீக் 2024 தொடரில் ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ஆர்சிபி மகளிர் படை நனவாக்கியுள்ளது. ஐபிஎல் தொடங்கி 17வது ஆண்டில் இது நடந்துள்ளது. மகளிர் ப்ரீமியர் லீக் இரண்டாவது சீசனில் முதல் முறையாக களமிறங்கிய இறுதிப்போட்டியில் ஆர்சிபி மகளிர் அணி சாதித்துள்ளது

மகளிர் ப்ரீமியல் லீக் 2024 தொடரின் இறுதிப்போட்டி டெல்லி கேபிடல்ஸ் மகளிர் - ஆர்சிபி மகளிர் அணிகளுக்கு இடையே டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. மகளிர் ஐபிஎல் தொடரின் இரண்டாவது சீசனான இந்த தொடரில் டெல்லி கேபிடல்ஸ் இரண்டாவது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. மற்றொரு அணியான ஆர்சிபி முதல் முறையாக பைனலில் விளையாடுகிறது. இந்த போட்டியில் யார் வென்றாலும் முதல் முறை ஐபிஎல் கோப்பையை வெல்வார்கள் என்ற நிலையில் இரு அணிகளும் களமிறங்கின.
இறுதிப்போட்டியில் முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் 113 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. இதை சேஸ் செய்த ஆர்சிபி 19.3 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 115 ரன்கள் அடித்து வெற்றி பெற்றதுடன் முதல் முறையாக ஐபிஎல் கோப்பைக்கு முத்தமிட்டுள்ளது.
ஐபிஎல் தொடர் தொடங்கி ஒரு முறை கூட சாம்பியன் ஆகாத ஆர்சிபி அணியின் 16 ஆண்டு கால கனவை, ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ஆர்சிபி மகளிர் அணி நனவாக்கியுள்ளது.
