Wanindu Hasaranga: விளையாடியது 4 சர்வதேச போட்டிகள் மட்டும்தான்..! ஓய்வை அறிவித்த இலங்கை அணி Mystery ஸ்பின்னர்
இலங்கை அணியின் Mystery ஸ்பின்னராக இருந்து வரும் ஹசரங்கா டி சில்வா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். அத்துடன் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடப்போவதாக அறிவித்துள்ளார்
இலங்கை அணியின் இளம் பவுலராக இருந்து வருபவர் ஹசரங்கா டி சில்வா. 26 வயதாகும் இவர் இலங்கை அணிக்காக டெஸ்ட், ஒரு நாள், டி20 போட்டிகளில் விளையாடி வருகிறார். Mystery ஸ்பின்னரான இவர் பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தும் விதமாக பந்து வீசும் பவுலராக இருந்துள்ளார்.
ட்ரெண்டிங் செய்திகள்
இதையடுத்து ஹசரங்கா டி சில்வா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஆனாலும் தொடர்ந்து ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடப்போவதாக தெரிவித்துள்ளார். இவரது இந்த முடிவை இலங்கை கிரிக்கெட் வாரியம் ஏற்றுக்கொண்டுள்ளது.
ஆலரவுண்டரான ஹசரங்கா டி சில்வா பவுலிங் ஆல்ரவுண்டராக அணியில் உள்ளார். பவுலிங்கை போல் பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்டு கணிசமான ரன்களை குவித்த பேட்ஸ்மேனாகவும் இருந்துள்ளார். இதுவரை 48 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 67 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
அதேபோல் 58 டி20 போட்டிகளில் விளையாடி 91 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். டி20 கிரிக்கெட்ட பொறுத்தவரை இவரது சராசரி 15.80 என உள்ளது. அத்துடன் எகானமி 6.89 வைத்திருப்பதுடன் சிக்கனமாக ரன் வழங்கும் பந்து வீச்சாளராகவும் இருந்து வருகிறார்.
இலங்கை அணிக்காக 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஹசரங்கா டி சில்வா 4 விக்கெட்டுகள் மட்டும் எடுத்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் இவரது பவுலிங் பெரிதாக எடுபடாத நிலையில் ஓய்வு முடிவை எடுத்திருப்பதாக தெரிகிறது.
ஐபிஎல் போட்டிகளில் ஆர்சிபி அணிக்காக விளையாடி வரும் ஹசரங்கா டி சில்வா, அந்த அணியின் முக்கிய பவுலராக இருந்து வருகிறார். அத்துடன் பல்வேறு உள்ளூர் டி20 லீக்குகளில் முக்கிய வீரராக இருந்து வருகிறார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்