BCCI announces cash rewards: ஐபிஎல் மைதான ஊழியர்கள், கியூரேட்டர்களுக்கு ரொக்க வெகுமதிகளை அறிவித்தது பிசிசிஐ
BCCI: ஐபிஎல் போட்டிகள் நடைபெற்ற மைதானங்களை ரெடி செய்த மைதான ஊழியர்கள் மற்றும் கியூரேட்டர்களுக்கு ரொக்க வெகுமதிகளை அறிவித்தது பிசிசிஐ.

BCCI announces cash rewards: ஐபிஎல் மைதான ஊழியர்கள், கியூரேட்டர்களுக்கு ரொக்க வெகுமதிகளை அறிவித்தது பிசிசிஐ. (PTI Photo) (PTI)
பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா திங்களன்று அனைத்து 10 வழக்கமான ஐபிஎல் இடங்களின் மைதான ஊழியர்கள் மற்றும் கியூரேட்டர்களுக்கு தலா ரூ .25 லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்தார். ஐபிஎல் கிரிக்கெட் போட்டி வெற்றிகரமாக நடந்து முடிந்தது. சென்னை, ஐதராபாத், மும்பை, லக்னோ, அகமதாபாத் என நாடு முழுவதும் முக்கியமான மைதானங்களில் ஐபிஎல் நடந்தது.
மழை, பனி, வெயில் என பல சவால்களைக் கடந்த மைதானத்தை அதன் பராமரிப்பாளர்கள் பராமரித்ததன் காரணமாகவே ஐபிஎல் போட்டிகல் எந்தவித சிரமுமின்றி சிறப்பாக நடந்து முடிந்தன. இதை கவுரவிக்கும் வகையில் மைதான பராமரிப்பாளர்களுக்கு வெகுமதியை பிசிசிஐ அறிவித்துள்ளது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 3-வது முறையாக கோப்பையை வென்றது.