ஆத்மநாதர் மேல் கொண்ட காதல்.. மாணிக்கவாசகர் எழுதிய கோயில்.. மூலவராக அமர்ந்த ஆத்மநாத சுவாமி!
Athmanathaswamy: சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் அருள்மிகு ஆத்மநாத சுவாமி திருக்கோயில். இந்த கோயிலில் வீற்றிருக்கக்கூடிய மூலவர் ஆத்மநாத சுவாமி எனவும் தாயார் யோகாம்பாள் என்று திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றனர்.

Athmanathaswamy: உலகம் முழுவதும் மிகப்பெரிய பக்தர்கள் கூட்டத்தை தன்வசம் வைத்திருக்க கூடியவர் சிவபெருமான். எங்கு திரும்பினாலும் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன இந்தியாவின் தெற்கு பகுதியை ஆண்ட மன்னர்கள் அனைவரும் கடல் கடந்து பல நாடுகளுக்கு சென்று வெற்றிகளை கண்டனர். அந்த மன்னர்கள் சிவபெருமானின் மிகப்பெரிய பக்தர்களாக திகழ்ந்துள்ளனர். சென்ற இடமெல்லாம் மற்றும் வெற்றி பெற்ற இடமெல்லாம் சிவபெருமானுக்கு கோயில் எழுப்பி தங்களது வெற்றியையும் பக்தியையும் வெளிப்படுத்தியுள்ளனர்.
இது போன்ற போட்டோக்கள்
Jul 10, 2025 10:29 AMவியாழனின் அருள் பெற ஒரு அற்புத வழி! புதிய கைகுட்டையா வெற்றி உறுதியா!
Jul 08, 2025 10:33 AMஜூலை 18 முதல் புதனின் வக்கிரப் பயணம்: 3 ராசிக்காரர்களுக்கு பிரச்சனைதா!
Jul 08, 2025 10:07 AMஅவர்களுக்கு நல்ல நாட்கள் வரும்.. இந்த ஐந்து ராசிகளுக்கு லட்சுமி கடாக்ஷம் நிச்சயம்
Jun 30, 2025 09:29 AMஇந்த 3 ராசிக்காரர்களுக்கு திடீர் பண ஆதாயம் கிடைக்கும் - வீடு வாங்குவீங்க, தொழிலில் வெற்றி பெறுவீங்க!
Jun 27, 2025 10:06 AMநாளை முதல் இந்த மூன்று ராசிகளும் சக்கரத்தை சுழற்றும்.. மாறப்போகும் அதிர்ஷ்டம்.. நவ பஞ்சமி யோகத்தின் சுப பலன்கள் இதோ!
Jun 25, 2025 09:43 AM3 ராசிக்காரர்களின் நல்ல நேரம் ஜூன் 30 முதல் தொடங்கும், திடீர் பண ஆதாயம் ஏற்பட வாய்ப்பு
பாண்டியர்கள் மற்றும் சோழர்கள் மிகப்பெரிய எதிரிகளாக இருந்தாலும் அவர்கள் அனைவரும் சிவபெருமானின் தீவிர சிவ பக்தர்களாக திகழ்ந்து வந்துள்ளனர். கடவுளுக்கெல்லாம் கடவுளாக திகழ்ந்துவரும் சிவபெருமான் உலகம் முழுவதும் லிங்கத் திருமனையாக காட்சி கொடுத்து வருகின்றார்.
மன்னர்கள் கட்டி வைத்து சென்ற கோயில்கள் பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தும் இன்று வரை கம்பீரமாக வானுயர்ந்து காணப்படுகின்றன. சில கோயில்கள் எந்த காலகட்டத்தில் கட்டப்பட்டது என்பது கூட இன்று வரை கண்டுபிடிக்க முடியவில்லை. சில கோயில்களை கண்டு ஆராய்ச்சியாளர்கள் இன்றும் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர்.