Lucky Zodiac: செவ்வாய் சுக்கிரன் சேர்ந்து கொட்டும் பணமழை..3 யோக ராசிகள்
இரண்டு கிரகங்களின் சுபயோகத்தால் ராஜயோகத்தை பெற்ற ராசிகளை காண்போம்.
நவக்கிரகங்களின் தளபதி செவ்வாய் பகவான். இவர் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றுவார். இவருடைய இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக நவக்கிரகங்களில் பார்க்கப்படுகிறது. மன தைரியம், வீரம், விடாமுயற்சி, தன்னம்பிக்கை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக இவர் விளங்கி வருகிறார்.
நவகிரகங்களில் மங்கள கிரகமாக சுக்கிர பகவான் விளங்கி வருகிறார். இவர் செல்வம், செழிப்பு, ஆடம்பரம், சொகுசு, காதல் உள்ளிட்டவை களுக்கு காரணியாக விளங்கி வருகிறார். கிரகங்களின் பயணம் எப்படி தாக்கத்தை ஏற்படுத்துகிறதோ, அதேபோல கிரகங்களின் சேர்க்கையும் 12 ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும்.
செவ்வாய் பகவான் ஏற்கனவே விருச்சிக ராசிகள் பயணம் செய்து வருகிறார் கடந்த டிசம்பர் 25ஆம் தேதி அன்று சுக்கிர பகவான் விருச்சிக ராசிக்குள் நுழைந்தார். இந்த இரண்டு கிரகங்களின் சேர்க்கை புதிய மங்கள யோகத்தை உருவாக்கியுள்ளது.
இந்த மங்கள யோகத்தின் தாக்கமானது அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும் குறிப்பிட்ட மூன்று ராசிகள் சுப பலன்களை பெறப்போகின்றனர். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார் என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளலாம்.
மிதுன ராசி
உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் செவ்வாய் மற்றும் சுக்கிரன் சேர்க்கை நிகழ்ந்துள்ளது. உங்கள் குடும்பத்தில் இருந்து சிக்கல்கள் அனைத்தும் விலகும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல பலன்கள் கிடைக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது.
விருச்சிக ராசி
உங்கள் ராசியில் முதல் வீட்டில் செவ்வாய் மற்றும் சுக்கிரன் சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் உருவான தனயோகத்தால் உங்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். நீதிமன்ற வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடியும். பெற்றோரின் உடல்நலத்தில் முன்னேற்றம் உண்டாகும். நிதி நிலைமையில் இருந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும் செலவுகள் குறைந்து சேமிப்பு அதிகரிக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
சிம்ம ராசி
உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் சுக்கிரன் மற்றும் செவ்வாய் சேர்க்கை நிகழ்ந்துள்ளது. குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். உடன் பிறந்தவர்களால் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கடின உழைப்பு உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும். பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9