வீட்டில் இருக்கும் தரித்திரத்தை விரட்டி செல்வம் பெறுவது எப்படி?
தரித்திரம் நீங்கி செல்வ செழிப்பு ஏற்பட என்ன செய்ய வேண்டும் என பார்க்கலாம்.
பணம்
ஏன் என் வாழ்க்கையில் மட்டும் இப்படி கஷ்டங்கள் நடக்கிறது என தோன்றும். அதற்கு எல்லாம் மிக முக்கிய காரணம் தரித்திரம் பிடிப்பது தான். கீழ் வரும் குறிப்புகளை பின் பற்றி வந்தால் உங்களுக்கு பிடித்து இருக்கும் தரித்திரம் நீங்கி செல்வ பணம்உண்டாகும்.
- வீடுகளில் ஓடாத கடிகாரங்கள், விழுந்து உடைந்த கண்ணாடி ஆகியவை இருந்தால் உடனடியாக வெளியில் வீச வேண்டும்.
- கண்ணாடி சிலைகளில் எதாவதது விரிசல் அல்லது கை, கால்கள் உடைந்து இருப்பது போல் இருந்தால் தூக்கி போட்டுவிட வேண்டும்.
- வீடுகளில் ஒரு பூஜை அறையில் அளவுக்கு அதிகமான சாமி படங்கள் வைப்பதை தவிர்க்க வேண்டும். அப்படி இருந்தால் கோயிகளில் வைத்து விட வேண்டும்.
- சமையல் அறையில் அதிகமாக பார்த்திரங்கள் போட்டு வைக்க கூடாது. முடிந்த அளவுகள் வேலைகள் முடித்த பிறகு கழுவி வைப்பது நல்லது. இரவு அப்படியே வைத்துவிட்டு படுத்து உறங்கினால், தரித்திரம் வந்து நம் வீட்டிற்குள் அடைந்துவிடும்.
- பெண்கள் சேலை எல்லாம் நன்றாக கட்டினாலும் சிலர் கிழிந்த, பழைய உள் அடைகளை பயன்படுத்துவார்கள். அதை தவிர்க்க வேண்டும்.
- ஆண்கள் பனியனில் ஓட்டை விழுந்தால் அதை தூக்கி போட வேண்டும்.
- பழைய காலண்டர் தூக்கி போட வேண்டும். முந்தைய ஆண்டு காலண்டர் வீட்டிற்குள் இருக்க கூடாது.
- படுக்கை அறையில் இருப்பது சிறப்பான ஒன்று இல்லை. அதை எடுத்துவிட வேண்டும். அல்லது தூங்கும் போது அதற்கு ஸ்கீரின் போட்டு மறைப்பது நல்லது.
- பயன்படுத்தும் பொருள்களை தவீர மற்ற பொருள்கள் வீட்டிற்குள் போட்டு அடைத்து வைத்தால் தரித்திரம் வந்துவிடும்.
இதை எல்லாம் செய்தால் நம் வீட்டில் இருந்து தரித்திரம் நீங்கி உங்களுக்கு செல்வ செழுப்பு உண்டாகும்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்