Horoscope Luck: தீபமாய் நின்று எரியும் சூரியன், குரு.. எமனே வந்தாலும் எதிர்த்து நிற்கும் ஜாதக அமைப்பு! - சூட்சமம் என்ன?
என்ன பிரச்சினை வந்தாலும் அதை உடைத்தெறிந்து விட்டு சீறி எழும் ஜாதகம் எது தெரியுமா?
உங்கள் ஜாதகத்தில் நல்ல தசா புத்திகள் இருக்குமானால், நீங்கள் என்ன மாதிரியான பிரச்சினையாக இருந்தாலும், எழுந்து வந்து விடுவீர்கள். அது இல்லை என்றால், என்ன ஆனாலும் உங்களுக்கான பாசிட்டிவான விஷயத்தை நீங்கள் தேடிக்கொள்வது என்பது கடினமான ஒன்றுதான். ஆனால், இதில் சில விதிவிலக்குகள் உண்டு.
என்ன பிரச்சினை வந்தாலும் சிலர் எழுந்து ஓட வேண்டும், எத்தனை தோல்வி வந்தாலும், எதிர்த்து நிற்க வேண்டும் என்று நினைப்பார்கள். அப்படியானவர்களின் ஜாதகம் சில சூட்சமங்களை கொண்டதாக இருக்கும்.
முதலில் அந்த ஜாதகத்தில் குருவும், சூரியனும் கெட்டுப்போகக்கூடாது. காலப்புருஷத்தத்துவத்தின் படி, சூரியன் ஒன்பதாம் இடத்திற்கு உரியவர். குரு 5 -ம் இடத்திற்கு உரியவர். என்ன வந்தாலும் எழுந்திரித்து ஓட வேண்டும் என்றால், அவர்களுக்கு மேற்குறிப்பிட்ட இடங்கள் சாதகமாக இருக்க வேண்டும். காரணம் என்னவென்றால், 5 இடம் என்பது பூர்வ புண்ணியம், 9 இடம் என்பது பாக்கியம்.
அதே போல, செவ்வாய், குரு, சூரியன் ஆகிய மூன்று ஒன்றோடு ஒன்று தொடர்பில் இருக்கும் போது, அவர்களுக்கு மரியாதை, பிரபலம் உள்ளிட்ட அனைத்தும் கிடைக்கும். இப்படி இருந்தும் பெரிதான ஜொலிப்பு இல்லை என்றால், அது தசா புத்தியைப் பொருத்து மாறுபடும்.
இந்த மூன்று கிரகங்களை தொடர்பில் கொண்டவர்கள், என்ன ஆனாலும் சரி, தன்னுடைய கெளரவத்தை விட்டுக்கொடுக்க மாட்டார்கள். கடன் வாங்கியாவது, தன்னுடைய கெளரவத்தை வெளிப்படுத்த முயலுவார்கள்.
உங்கள் லக்னப்படி 5ம் அதிபதி மற்றும் 9 ம் அதிபதியை பார்க்க வேண்டும். அவர்களும் நன்றாக இருந்து, குருவும் சூரியனும் நன்றாக இருந்தால், நீங்கள் ஜெயிக்கும் குதிரை. நீங்கள் கவலைப்படவே தேவையில்லை.
நன்றி: அவிநாசி ஜோதிட லிங்கம்!
டாபிக்ஸ்