தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Friday Worship: வெள்ளிக்கிழமையில் அப்படி என்ன சிறப்பு? - மகாலட்சுமி விரதத்தின் மகத்துவம் தெரியுமா?

Friday Worship: வெள்ளிக்கிழமையில் அப்படி என்ன சிறப்பு? - மகாலட்சுமி விரதத்தின் மகத்துவம் தெரியுமா?

Suriyakumar Jayabalan HT Tamil
Jul 07, 2023 11:34 AM IST

வெள்ளிக்கிழமை மகாலட்சுமி விரத வழிபாட்டின் சிறப்புகள் குறித்து இங்கே காண்போம்.

 மகாலட்சுமி விரதத்தின் மகத்துவம்
மகாலட்சுமி விரதத்தின் மகத்துவம்

கருணையின் வடிவமாக மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருப்பவர் அம்பிகை. வீட்டில் இருக்கக்கூடிய துஷ்ட சக்திகளை விரட்டி எடுத்து சுபிட்சத்தை அளிக்கக் கூடியவர் இவர். அதனால்தான் முன்னோர்கள் வெள்ளிக்கிழமை அன்று வீடு சுத்தம் செய்தார்கள்.

வியாழக்கிழமை அன்று வீட்டில் இருக்கக்கூடிய பூஜை பொருட்களைச் சுத்தப்படுத்தி அதேசமயம் வீட்டையும் சுத்தப்படுத்தி மறுநாள் வழிபாட்டிற்குத் தயாராக வைத்திருப்பார்கள். மற்ற நாட்களை விட பெண்கள் வெள்ளிக்கிழமை அன்று தலை குளிப்பார்கள். பூஜை அறையில் விளக்கு ஏற்று வழிபாடு செய்வார்கள்.

சிறப்பாக அன்றைய தினம் கோயிலுக்குச் சென்று ராகு கால வேளையில் சக்தியின் அம்சமான துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை பழத்தில் தீபம் ஏற்று வழிபாடு செய்வார்கள். வெள்ளிக்கிழமை அன்று வீடும், சுத்தமாக இருந்தால் அங்கே மகாலட்சுமி வாசம் செய்வார் என்பது ஐதீகமாகும்.

மகாலட்சுமியின் அருள் இருந்தால், சுக்கிர பகவானின் அருளும் யோகமும் தானாகக் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. ஏனென்றால் வெள்ளிக்கிழமையைச் சுக்கிர வாரம் எனக் கூறுகிறார்கள். சுக்கிர யோகத்தைத் தரக்கூடிய மகாலட்சுமி விரதம் இருந்து வழிபாடு செய்தால் குடும்பத்தில் இருக்கக்கூடிய சிக்கல்கள் விலகுமாம்.

வீட்டில் இருக்கக்கூடிய துஷ்ட சக்திகள் நீங்கி இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். தடைப்பட்டுக் கிடக்கக் கூடிய மங்கள காரியங்கள் நடக்கும். கடன் தொல்லை இருக்காது என பல்வேறு விதமான சிக்கல்களில் இருந்து விடுபடலாம் என ஆன்மீகம் கூறுகிறது.

வெள்ளிக்கிழமை மட்டுமல்லாமல் மற்ற தினங்களிலும் மகாலட்சுமியும் வழிபாடு செய்யலாம். மேலும் வீட்டில் விளக்கு ஏற்றி அம்பாளுக்குச் செந்நிற மலர்களால் அலங்காரம் செய்து பூஜை செய்யலாம். இவ்வாறு மகாலட்சுமி குங்குமம் வைத்து வழிபாடு செய்தால் மாங்கல்ய பலம் அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.

சுமங்கலி பெண்களுக்கு ஜாக்கெட் துணி, மஞ்சள் மற்றும் குங்குமம் உள்ளிட்ட மங்களப் பொருட்களைக் கொடுக்கலாம். தொடர்ந்து இதுபோல மகாலட்சுமியை வணங்கி வழிபாடு செய்து வந்தால் வீட்டில் சுபிட்சம் அதிகரிக்கும் என்பது ஐதீகமாகும்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

Google News: https://bit.ly/3onGqm9

WhatsApp channel

டாபிக்ஸ்