Guru Peyarchi Palan 2024: குரு விட மாட்டார்.. சுக்கிரன் சேர்ந்து விட்டார்.. பணமழை கொட்ட போகுது பாருங்க..அதிர்ஷ்ட ராசிகள்
Guru Peyarchi Palan 2024: சுக்கிரன் வரும் ஏப்ரல் 24ஆம் தேதி அன்று சுக்கிர பகவான் மேஷ ராசியில் நுழைகின்றார். இதனால் சுக்கிரன் மற்றும் குருபகவான் இருவரும் ஒன்று சேருகின்றனர். இவர்களுடைய சேர்க்கை அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்க போகின்றனர்.
நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்க கூடியவர் குருபகவான். இவர் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. குருபகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம் திருமண பாக்கியம் உள்ளிட்டவர்களுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.
குரு தற்போது மேஷ ராசியில் பயணம் செய்தவர்கள் என்றால் வரும் மே மாதம் ஒன்றாம் தேதியன்று ரிஷப ராசியில் இடம் மாறுகிறார் ஆண்டிற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். குருபகவான் இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். நவக்கிரகங்களில் ஆடம்பரக்கிரகமாக விளங்கக்கூடியவர் சுக்கிர பகவான். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர்.
சுக்கிரன் வரும் ஏப்ரல் 24ஆம் தேதி அன்று சுக்கிர பகவான் மேஷ ராசியில் நுழைகின்றார். இதனால் சுக்கிரன் மற்றும் குருபகவான் இருவரும் ஒன்று சேருகின்றனர். இவர்களுடைய சேர்க்கை அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்க போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
மேஷ ராசி
உங்கள் ராசியில் குரு மற்றும் சுக்கிரன் சேர்ந்து சுப பலன்களை கொடுக்கப் போகின்றனர். வாழ்க்கையில் வெற்றிகள் கிடைக்கும் தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் இருக்கும். பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக கிடைக்கும். தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் முன்னேற்றம் உண்டாகும். பாராட்டுக்கள் உங்களைத் தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி மற்றும் செல்வம் பெருகும்.
ரிஷப ராசி
குரு மற்றும் சுக்கிரன் இணைந்து உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றனர். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்ல லாபம் கிடைக்கும். பணம் சேமிப்பதில் வெற்றி கிடைக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். புதிய முயற்சிகள் உங்களுக்கு வெற்றியை தேடி தரும். சிறந்த வாய்ப்புகள் உங்களுக்கு பணவரவை அதிகப்படுத்தும்.
கடக ராசி
குரு மற்றும் சுக்கிரன் இணைந்து உங்களுக்கு நன்மைகளை கொடுக்கப் போகின்றனர். வாழ்வில் வசதி மற்றும் ஆடம்பரம் அதிகரிக்கும். கடின உழைப்பு உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே சமூகமான சூழ்நிலை உண்டாகும். எதிர்பாராத நேரத்தில் வருமானம் அதிகரிக்கும். நண்பர்களின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9